துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி
துபாய்: துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி 23.06.2015 அன்று நடைபெற்றது.
துவக்கமாக அஸ்பாக் அகமது இறைவசனங்களை ஓதினார். ஜமாஅத் தலைவர் ஜாஹிர் உசேன் தலைமை வகித்தார். விழாக்குழு கமிட்டியின் அஹமது சாதிக் வரவேற்புரை நிகழ்த்தினார். ஆலோசகர் சம்சுதீன் துவக்கவுரை நிகழ்த்தினார்.
ஏகத்துவ மெய்ஞான சபையின் மௌலானா சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரமலானின் முக்கியத்துவம் குறித்து நினைவூட்டினார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற ஷேக் அப்துல்லாவுக்கு நினைவுப் பரிசை அவரது உறவினர் டாக்டர் முகம்மது இஸ்மாயில் இடம் வழங்கப்பட்டது.
விழாவில் சையது இப்ராகிம், ஹசன் அகமது, என்.எஸ்.ஏ. நிஜாமுதீன், முதுவை ஹிதாயத், ஜஹாங்கீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அஹமது இம்தாதுல்லா நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அஹமது சாதிக், ஹபீப் திவான், முஹம்மது ஜாபர் கனி உள்ளிட்ட குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.