கத்தார் காயல் மன்றத்தின் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி- கடையநல்லூர் எம்எல்ஏ அபூபக்கர் பங்கேற்பு
கத்தாரில் நடந்த காயல் மன்றத்தின் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கடையநல்லூர் எம் எல் ஏ பங்கேற்றார்.
கத்தார் : கத்தார் காயல் பட்டணம் நல மன்றத்தின் 33வது பொதுக்குழு கூட்டம் மற்றும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி கடந்த வியாழக்கிழமை கத்தார் - தோஹாவில் உள்ள வேம்பநாடு ரெஸ்டாரெண்டில் நடந்தது.
கத்தார் காயல் மன்றத்தின், மன்ற செயலாளர் எம்.என். முஹம்மது சுலைமான் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தோரை வரவேற்று நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
மன்றத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களான பாஜுல் கரீம், கே.வி.ஏ.டி ஹபீப் முஹம்மது, முஹம்மது யூனுஸ் மற்றும் மார்க்க அறிஞர் அல் ஹாபிழ் ஸாலிஹ் ஆலிம் ஆகியோர் முன்னிலை வகிக்க, மன்ற தலைவர் மொகுதூம் மீரான் அவர்கள் இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.

இறைமறை வசனங்கள்
மன்ற உறுப்பினர் ஹாபிழ் மஹ்மூத் லெப்பை இறைமறையின் சில வசனங்களை இனிதே ஓதி துவக்கி வைத்தார். "கவிக்குயில்" ஃபாயிஸ் இனிய பாடலுடன் கூட்டம் ஆரம்பமானது. இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் முஸ்தபா (தலைவர், கத்தர் காயிதே மில்லத் பேரவை) மற்றும் சபீர் அஹமத் (மூத்த தலைவர், கத்தர் லால்பேட்டை ஜமாஅத்) கலந்து கொண்டார்கள்.

சட்டசபை உறுப்பினர் பங்கேற்பு
சிறப்பு விருந்தினராக, தமிழகத்தில் இருந்து கடையநல்லூர் சட்டசபை உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவருக்கு நினைவுப் பரிசை மன்ற தலைவர் மொகுதூம் மீரான் வழங்கினார். பின்னர் சிறப்பு அழைப்பாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.

ஒரு நாள் ஊதியம் நன்கொடை
நடப்பு நிகழ்ச்சியில், நகரின் பல்வேறு நலத்திட்டத்திற்காக மன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை நன்கொடையாக வழங்கி சிறப்பித்தார்கள். இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மஃரிப் தொழுகைக்கான அதான் ஒலிக்கப்பட, இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி துவங்கியது. அனைவருக்கும் பேரீச்சம்பழம், வடை வகைகள், குளிர்பான வகைகள், பழ வகைகள் பரிமாறப்பட்டன.

நிகழ்ச்சி ஏற்பாடுகள்
அதற்குப் பிறகான இரண்டாம் அமர்வில், தூத்துக்குடியில் சமீபத்தில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் உயிர் நீத்த சகோதர சகோதரிகளுக்கு மன்றத்தின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மன்றத்தின் ஆலோசனை குழு உறுப்பினர் பாஜுல் கரீம் நன்றி தெரிவிக்க ஹாஃபிழ் அமீர் சுல்தானின் இனிய பிராத்தனையுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளை துணை தலைவர்கள் முஹம்மத் முஹ்யித்தீன் மற்றும் செய்து முஹிதீன் ஆகியோர் செய்திருந்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications