இன்று துபாயில் சமூக நல்லிணக்க அரங்க கூட்டம்
துபாய்: மனித நேய மக்கள் கலாச்சார பேரவையின் துபாய் மண்டலம் சமூக நல்லிணக்க அரங்க கூட்டத்தை இன்று நடத்துகிறது.
சமூக நல்லிணக்க அரங்க கூட்டம் 8.1.2016 அன்று மாலை 7 மணி அளவில் துபாய் கோரல்தேரா ஹோட்டலில் (ரீஃப் மால் பின்புறம், பைத் அல் மண்டி ரெஸ்டாரண்ட் அருகில்) நடைபெற உள்ளது.
அமீரக மண்டல ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் அப்துல் காதர் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி மற்றும் ம.ம.க மாநில அமைப்பு செயலாளர் ராசுதீன் ஆகியோர் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்ற உள்ளார்கள்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அதை வெற்றியடையச் செய்யுமாறு மனிதநேய மக்கள் கலாச்சார பேரவையின் துபாய் மண்டலம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய 0502581445, 0527095610, 0562375660,0567580295, 0529236426 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications