அமீரகத்தில் தமிழர்கள் கொண்டாடிய தமிழ் மாலை
அல் அய்ன்: அமீரகத்தின் பசுமை நகரமாம் அல் அய்னில் 20.12.2013 வெள்ளி இரவு 8 மணி முதல் இந்திய சமூக மையமும், அல் அய்ன் தமிழ் குடும்பமும் இணைந்து நடத்திய தமிழ் மாலை நிகழ்ச்சி இந்திய சமூக மைய உள்ளரங்கில் சமூக மைய நிர்வாகிகள் திரு.அஷரப், திரு.ஜிம்மி, திரு.பைசல், திரு.சலீம் ஆகியோரது முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்மாலை நிகழ்ச்சியில் அல் அய்ன் வாழ் கவிஞர்களின் கவியரங்கம் அரங்கேறியது. அதைத் தொடர்ந்து கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் நிறுவனர் திரு.காவேரி மைந்தன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

கடுங்குளிரிலும் அல் அய்ன் வாழ் தமிழ் மக்கள் தங்களது பாரம்பரிய உடையில் ஆர்வத்தோடு உள்ளரங்கம் முழுவதும் நிரம்புமாறு பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
தமிழர்கள் கடல் கடந்து வாழ்ந்தாலும் அவர்களின் மொழிப்பற்று என்றும் மாறாது என்பதற்கான சான்றாக இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.

திருமணங்களில் பெரிதும் மகிழ்ச்சி தருவது காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா என்ற பட்டிமன்றம் பார்வையாளர்களின் மிகுந்த ஆரவாரத்தோடு நடைபெற்றது. அல் அய்ன் தமிழ் குடும்ப நிர்வாகத்தினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications