Aadhavans Essay
![]() |
நாகரீகத்தின் பெயரில் கிராமங்களும் மெல்ல மெல்ல தங்களது உயிர்மையை இழந்து வரும் சூழலில் நாட்டுப் புறப்பாடல்களை புத்தகங்களில் மட்டுமல்லாமல் இணையத்திலும் பாதுகாக்கும் முயற்சி இது.
கிராமத்து இலக்கியங்களான இந்த நாட்டுப் புறப் பாடல்கள், வாழ்க்கையின் விளக்கங்கள் ...
தாலாட்டு, காதல், தொழில், கொண்டாட்டம், ஒப்பாரி என மனித வாழ்வின் பல்வேறு நிலைகளைப் பறை சாற்றும் இந்த வாய்மொழிப் பாடல்கள் தமிழின் மூத்த இலக்கியங்களில் ஒன்று.
இப்போது தனது பலமிழந்து நம் ஊர் கிராமப் புறங்களில் மெளனமாய் ஒலித்துக் கொண்டிருக்கும் நாட்டுப்புறப் பாடல்கள்சிலவற்றை உங்கள் முன் வைக்கிறோம்.
மிஞ்சி போட்ட ரஞ்சிதமே
பச்சை மணக்குதடி பாதகத்தி ஒம் மேல
இச்சை பட்ட நேரமெல்லாம் ஏங்கி முகம் வாடுறனே ..
பாக்கு துவக்குதடி பழைய உறவு மங்குதடி ..
ஏலம் கசக்குதடி இன்னொருவன் மையலாலே ...
தங்கத்துக்குத் தங்கம் இருக்க தனித் தங்கம் நானிருக்க..
பித்தாலத் தங்கத்துக்குப் பித்தாசை கொள்ளலாமா?
கடலில் தலைமுழுகி கப்பலில் சிக்கு உலர்த்தி
ரெங்கத்துப் பூ ஒடிச்சு நேரவாடி பேசிப் போவோம் ..
கரை போட்ட கழுத்தழகி கடுக்கை போட்ட முகத்தழகி..
மிஞ்சி போட்ட ரஞ்சிதமே மின்னவாடி பேசிப் போவோம் ..
ஒத்தபனை சித்தநந்த ஒழுகு பனை ராமேஸ்வரம்
கும்பபனை அறியவேறு குயிலு இருந்தும் கூவாதோ..
சோட நந்த கண்மாய்க்குள்ள சோடி புறா மேயயிலே ..
சோடி பிரிஞ்சன்னைக்கு சோரவிட்டேன் கண்ணீரை ..
கம்மாய்க்குள் கழுகு மரம் கலந்து பேசி ஆறுமாதம் ..
சந்திக்கிற நேரமெல்லாம் சனியன் வந்து நேரிடுதே...
கொலவாலு நெல்லுகுத்தி கொலயாம சோறு பொங்கி
எலவாங்க போன மச்சான் எவளோட தாமுசமோ ..
ஆத்துக்குள்ள அஞ்சரளி அத்தை மவன் வச்சரளி ..
காக்கிதுல்ல பழுக்குதில்ல கவ்வோதிபய வச்சரளி ..
எண்ணெ தேச்சு தலை முழுகி நடுத்தெருவே போரவரே ..
வண்ணமிட்ட தலைபோல என் கண்ணைப் பறிக்குதய்யா ...
(மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த மீனாள் (வயது 45) என்பவர் சொல்ல அதைப் பதிவு செய்தது திருச்சி பிஷப் ஹீபர்கல்லூரியின் தமிழ்த் துறை மாணவ, மாணவிகள்)
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.













Click it and Unblock the Notifications