நதியை தேடி வந்த கடல்- ராதிகா பாலா
Subscribe to Oneindia Tamil
நஞ்சையில் நாற்று நட்டு
புஞ்சையில் மாற்றுப் பயிர் செய்து
பஞ்சமில்லாம் தமிழன் வாழ்ந்திருக்க
வஞ்சமில்லாம் வழிந்தோடிய காவிரி
கொஞ்சமும் நீர் இன்றி வறண்டு போக
வஞ்சனை செயத விதியே...
மிஞ்சிய மக்களும்
எஞ்சிய நாட்களை
நெஞ்சிலே பாரத்துடன்
கஞ்சியே உணவாக
செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
கெஞ்சி இரந்து வாழும் வேளையில்
விஞ்சிய கடல் அலைகள்
வஞ்சி காவிரியைத் தேடி
அஞ்சிய மக்கள் வீட்டுக்கே வந்து விட்டால்
தஞ்சம் என அவரும் புகுவது எங்கோ?
கொஞ்சம் யோசித்துப் பார்ப்பாயா?
நஞ்சாகிப் போன நல் விதியே.. நீ..












Click it and Unblock the Notifications