For Quick Alerts
For Daily Alerts
Just In
கத்துங்குரல்...- தமிழ்மதி
கத்தும் கிளியாய்
கத்தும் என்னவள்
இந்த
இணையம் வழி இதயம் பேச
அவளங்கும் நானிங்கும்
கண்ணைக் கட்டி
காட்டில் விட்டது போல்
இந்த
கனணிக்கு முன்னிருந்து
கத்தும் குரல்கள்.
ஒன்றரை மணி நேரமாய்
ஒலிவாங்கியில் உதடுரச...
இருக்கும் இடைவெளி விரட்ட...
கத்தினால் சத்தம்
கடல் தாண்டுமா
இல்லை
கரை சேரும்முன்
கரைந்துவிடுமா?
விட்டு விட்டு தொடர்பு.
கருவி திருகி
காது சேரா ஒலி.
இந்த கனணி திரைமுன்
கண்ணுக்கெட்டும் தூரம்தான்
ஆனால், காதுக்கெட்டா தூரமாய்.
தனிமை தாண்டி
தன் துணை சேர
சக்ரவாகப் பறவையாய்
சத்தமிடும் மனசு
காதில் விழுவதற்கு மட்டும்
கத்துவதில்லை
குரல்.
Comments
Story first published: Thursday, January 20, 2005, 16:50 [IST]