கத்துங்குரல்...- தமிழ்மதி
Subscribe to Oneindia Tamil
கத்தும் கிளியாய்
கத்தும் என்னவள்
இந்த
இணையம் வழி இதயம் பேச
அவளங்கும் நானிங்கும்
கண்ணைக் கட்டி
காட்டில் விட்டது போல்
இந்த
கனணிக்கு முன்னிருந்து
கத்தும் குரல்கள்.
ஒன்றரை மணி நேரமாய்
ஒலிவாங்கியில் உதடுரச...
இருக்கும் இடைவெளி விரட்ட...
கத்தினால் சத்தம்
கடல் தாண்டுமா
இல்லை
கரை சேரும்முன்
கரைந்துவிடுமா?
விட்டு விட்டு தொடர்பு.
கருவி திருகி
காது சேரா ஒலி.
இந்த கனணி திரைமுன்
கண்ணுக்கெட்டும் தூரம்தான்
ஆனால், காதுக்கெட்டா தூரமாய்.
தனிமை தாண்டி
தன் துணை சேர
சக்ரவாகப் பறவையாய்
சத்தமிடும் மனசு
காதில் விழுவதற்கு மட்டும்
கத்துவதில்லை
குரல்.












Click it and Unblock the Notifications