உழைப்பவர் உலகம்- விஷ்ணுதாசன்
உழைக்கும் நேரம் உறங்கும் நேரம்
வித்தியாசம் இல்லை- இருந்தும்
அத்தியாவசியப் பொருள் வாங்க
கையில் காசு இல்லை.
கண்கள் மூடி கனவு காணும்
பட்டு மெத்தை வாசிகள்,
கண்கள் இருந்தும் காட்சி இருந்தும்
காணவில்லை கனவினை
கண்டதில்லை உணவினை
காணும் கனவு ஒன்றுதான்
மூன்று வேளை கஞ்சிதான்
ஒரு வேலை ஒரு வேளை
கிடைக்காமல் கருவேலம்
முளைத்த சமையலறை எத்தனை
அங்கம் தேய உழைப்பவருக்கு
சங்கம் அமைத்தவர்கள் எத்தனை
சங்கம் வளரும் அமைத்தவர் வாழ்வர்
அரசுகளை உருவாக்கும் அப்பாவி ஏழைகள்
அப்படியே மாய்வர்.
- விஷ்ணுதாசன் ([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications