ப்ரிய சகி.
உன்னிடம் நான்
தொலைந்த பிறகும்
தேடாமலிருப்பது
என்னை நீ
பத்திரப்படுத்திவைப்பாயென்ற
பக்தியில் தான்..!!
என் தெருவில்
நீ நடந்த பாதச்சுவடுகள்..
அன்பின் அடையாளமாய்
இன்னமும் அழியாமல்
நம் காதலை
கெளரவப்படுத்திக்கொண்டிருக்கிறது..!!
கல்லூரியின்
கடைசி நாளில்
நீ அழுத கண்ணீர்..
என்னையே நனைத்தது
இன்னமும் ஞாபகமிருக்கிறது..!!
சகலமும்
எனக்கும் உனக்கும்
சரியான போது..
சம்பிரதாயம் எதற்கடி
நீயும் நானும்
வேற்று மதக்காரர்களென்று??!!
அபிரேகா அலாவுதீன்([email protected]) இவரது முந்தைய படைப்புகள்:
1. என் தேவ தேவி
2. என் சைக்கிள் தேவதையே..
3. கைக்குட்டை கனவு
4. வளைகுடாவில் தொலைந்தவனே..
5. நீயில்லாத நிமிடங்கள்
6. உன்னோடு நான்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications