நீயா அவள்?
சீண்டலாய் நான்
தீண்டியபோது தாங்காமல்
தலைகவிழ்ந்து கேவினாயே
நீயா அவள்?
நீயென்னை பார்ப்பதை
நான் பார்த்துவிட்டால்
வான் பார்ப்பாயே
நீயா அவள்?
உன் கண்களின் ஊடுருவலில்
நான் நிலைதடுமாறி
வார்த்தைகளை தேடிதவிக்கையில்
கீழுதடு கடித்து
கிண்டலாய் சிரிப்பாயே
நீயா அவள்?
எதார்த்தமாக இதழ்குவித்து
என்னை பார்க்கையில்
என் கன்னம் காட்டியபோது
முகம் சிவந்தாயே
நீயா அவள்?
காலொடிந்து கட்டிலில்கிடக்க
கண்களில் குளம்கட்டி
உச்சந்தலை கோதி
உள்ளங்கை பற்றினாயே
நீயா அவள்?
செல்போன் சிணுங்கலும்
தோள்சாய்ந்து காதலனிடம்
தெரிந்தவர் என்ற அறிமுகப்படுத்தலும்
நுனி நாக்கு ஆங்கிலமும்
நூதனமாகத்தான் மாறிவிட்டாய்
ஆறாண்டு இடைவெளியில்
அடுத்த பிறவி எடுத்தாயோ?
- பாஷா([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.