For Daily Alerts
Just In
அறை
கற்பனையில்தான்
கட்டிப் பார்க்க முடியும்
அப்படி ஒரு அறையை
உன்னாலும், என்னாலும்
நம் போன்றவர்களாலும்.
அண்ணாந்தும், அதிசயித்தும்
பார்க்க வேண்டியிருக்கிறது
அறைக்கு வெளியே தொங்கும்
அழகிய பெயர்ப் பலகையை.
மின் விசிறியின் காற்றோட்டத்தில்
அசைந்தாடுவதுபோல் தெரிகிறது
சுவரில் ஒட்டப்பட்டிருக்கும்
கடலோரத் தென்னந்தோப்பு.
அறிஞர்களின் சிந்தனைகள்
அழகாக அடுக்கப்பட்டிருக்கின்றன,
புத்தகங்களாக.
எழுதப் படிக்க வசதியாய்
தேக்குமர மேசை மீது மட்டும்
வட்டமாகப் பொழிகிறது விளக்கு.
விதம் விதமான
எழுதுகோல்களும்
கட்டுக்கட்டான
வெள்ளைத்தாள்களும்
ஏங்க வைக்கவே செய்கின்றன,
எழுதத் தெரியாதவர்களையும்
அந்த அறைக்கு உரிய
எழுத்தாளரையும்.
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]