குறை
Subscribe to Oneindia Tamil
காலிக் குடங்கள்
முட்டி மோதியதால்
நெளிந்து போய்க் கிடக்கிறது
தண்ணீர் லாரி.
பூமிக்குள்ளிருந்து புறப்பட்டு
நடுவீதியில் கம்பீரமாக
தலை நிமிர்ந்து நகர்கிறது
சாக்கடை.
மூடப்பட்ட
ஆலையைத் திறக்கக் கோரி
ஆர்ப்பாட்டம் செய்வதே
அன்றாட வேலாைகி விட்டது,
முன்னொரு காலத்தில்
அந்த ஆலையில்
வேலை செய்து
பிழைத்தவர்களுக்கு.
இப்படியாக
பார்க்கும்போதே
தெள்ளத் தெளிவாக
தெரியத்தான் செய்கிறது,
வாக்களித்து ஏமாந்த
தொகுதி மக்களின் குறைகள்.
இருந்தும்கூட
தொகுதியின்
மூலை முடுக்கெல்லாம்
ஒட்டி வைத்திருக்கிறார்கள்,
குறை கேட்க வரும்
மக்கள் தொண்டரே
வருக! வருக!!- என்று
சுவரொட்டியை
எப்படிச் சொல்வது
இந்த அப்பாவி மக்களுக்கு
பார்க்கும் போதே
குறைகளைத் தெரிந்து கொள்ளாதவர்களுக்கு
கேட்கும்போது மட்டும்
புரிந்து கொள்ள
முடியுமா என்று.












Click it and Unblock the Notifications