மயில்
Subscribe to Oneindia Tamil
மயில்களுக்கு எதிராக
நிறையவே சிந்திக்கிறார்கள்
மனிதர்கள்.
முதுகில் அமர்ந்து
உலகை மூன்றுமுறை
சுற்றி வந்தானாம்,
தன் தோகையையே
தூக்கிக்கொண்டு
விரைந்தோட முடியாத
மயில்மீது முருகன்.
கான மயிலாடக்
கண்டிருந்த வான்கோழி
என்று தொடங்கி
அடுக்கிக் கொண்டே
போகிறார்கள்
மனிதக் காழ்ப்பில்
பறவைகளை மட்டந்தட்டிய
பழம் புலவர்கள்
மயிலே மயிலே என்றால்
இறகு போடாது என்கிறார்கள்,
கத்திரிக்கோலுடன் பிறந்து
எதையும்
அறுத்து ரசிக்கும்
மரபில் பிறந்த
அழகுணர்ச்சியாளர்கள்.
எல்லாருமே
ஒருவித வீராவேசத்தோடு
அலைகிறார்கள்
மயில்களின் மயிருக்காக.
மயில்களை
பார்க்கும்போது மட்டுமின்றி
போய்ப் பார்த்தும்
சொல்லியாக வேண்டியிருக்கிறது.
மயிலே...மயிலே... நீ
எந்த மயிரானுக்கும்
இறகு போடாதே என்று.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications