மயில்
Subscribe to Oneindia Tamil
மயில்களுக்கு எதிராக
நிறையவே சிந்திக்கிறார்கள்
மனிதர்கள்.
முதுகில் அமர்ந்து
உலகை மூன்றுமுறை
சுற்றி வந்தானாம்,
தன் தோகையையே
தூக்கிக்கொண்டு
விரைந்தோட முடியாத
மயில்மீது முருகன்.
கான மயிலாடக்
கண்டிருந்த வான்கோழி
என்று தொடங்கி
அடுக்கிக் கொண்டே
போகிறார்கள்
மனிதக் காழ்ப்பில்
பறவைகளை மட்டந்தட்டிய
பழம் புலவர்கள்
மயிலே மயிலே என்றால்
இறகு போடாது என்கிறார்கள்,
கத்திரிக்கோலுடன் பிறந்து
எதையும்
அறுத்து ரசிக்கும்
மரபில் பிறந்த
அழகுணர்ச்சியாளர்கள்.
எல்லாருமே
ஒருவித வீராவேசத்தோடு
அலைகிறார்கள்
மயில்களின் மயிருக்காக.
மயில்களை
பார்க்கும்போது மட்டுமின்றி
போய்ப் பார்த்தும்
சொல்லியாக வேண்டியிருக்கிறது.
மயிலே...மயிலே... நீ
எந்த மயிரானுக்கும்
இறகு போடாதே என்று.












Click it and Unblock the Notifications