For Quick Alerts
For Daily Alerts
Just In
போராடு!
செந்தமிழை உயிரெனக் கொண்டவர்
வெந்தழல் விழியாளர் தமிழரின்
சொந்தமான தமிழக மண்மிசை
இந்திமொழி வருமா? எவன் சொன்னவன்?
பண்டை வீரத் தமிழர் பழங்கதை
கொண்ட ஏடுக ளாயிரம் கூறுமோர்
சண்டையும் தமிழ்வீரர் சரிதமும்
கண்டறியாத கழுதை கனைத்ததோ?
எங்கள் மானம் பழித்தொடா இந்தியைக்
கங்கை நாடர் திணிக்கக் கருதினார்?
சிங்கமே.. தமிழா! களம் வந்தது!
சங்கம் ஆர்த்துப் படைசரி செய்யடா!
வஞ்ச நெஞ்சினர் இந்தி வடவர்
அஞ்சி நடுங்க அணிகள் திரட்டி வா!
நெஞ்சு தூக்கி நில் தமிழா! எழு!
புன்சிரிப்பொடு போர்க்களம் ஆடு போ!
- காசி ஆனந்தன்
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]