For Daily Alerts
Just In
புகழ் பாடு!
களமெனில் முழங்கிவரும் ஏறு! - தமிழன்
கங்கு கரை பொங்கிவரும் ஆறு!
உளபகைவர் இலைஎனவே
உடல் எரிந்து நீறுபட
பளபளக்கும் வெந்தழலின் கூறு!- இதனை
படைவலியும் தோள்வலியும் நூறு!
மானமே தமிழனுயிர் அங்கம்!- தமிழன்
மனம் இனிய தமிழ்குலவு சங்கம்!
தேனெனும் தமிழ் அழியும்
சேதிவரும் போதினிலே
வானளவு பாயுமறச் சிங்கம்!- தமிழன்
மாசுபடாத் தூயமணித் தங்கம்!
தமிழன் உடற்குருதி சூடு!- தமிழன்
தனை எதிர்ப்போன் பாடுபெரும் பாடு!
இமயம் கடாரமெனும்
இடம் பலவென்றவனலவோ
தமிழனுக்கு யாவனுளன் ஈடு!- தமிழன்
தாங்கு புகழைத் தமிழா! பாடு!
- காசி ஆனந்தன்
Comments
chennai astrology literature poems essay poet eelam tamilnadu kural art gallery florals kaasi anandhan kasi anandan pavalar
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]