For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழ்மேல் ஆணை!
தாயே... தமிழே!
தலை கவிழ்ந்த பொற்செல்வி!
நீ கலங்க வேண்டாம்...
வருங்காலம் நின் காலம்!
அன்னாய்... இதுகேள்!
அடுத்த பரம்பரையில்
பொன்னால் முடிநீ
புனை நாள் இவண் செய்வேன்!
எள்ளி நகைத்து
நினைப்பழிப்போன் செந்நீர்
வெள்ளம் குளித்து
விளையாடுவேன் தாயே!
சத்தை இழந்த தமிழ்ச்
சாதி பிழைக்க நான்
பத்தாயிரங் கவிதை
பாடாமல் போவேனோ?
தாயே! துயரம்
தவிர்த்திரடி... மாற்றானை
நாயாய் அடித்து
நடுத்தெருவில் வைக்கின்றேன்!
என்னுயிரைத் தூக்கி
எறிந்து தமிழணங்கே
அன்னை நினதுயிராய்
ஆவேன் நான்... ஆணையடி!
- காசி ஆனந்தன்
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]