நீரின்றி அழியாது உலகு
அரக்கனென்றும், பூதமென்றும்
கொம்பு முளைத்த
உருவங்களை சில கதைகளில்,
பார்த்திருக்கிறோம்!!
இனி வரும் கதைகளில்
உன் படத்தை மட்டும்தான்
அச்சடிக்க வேண்டும்!
என் அருமைக் கடலே!!
காற்று வாங்க வந்தவன்
காதலிக்க வந்தவன்
மீன் பிடிக்க வந்தவன்
மீன் பிடிக்கச் சென்றவனை,
எதிர்பார்த்திருந்தவன்,
என அனைவரையும், சாதி மத
பேதம் பாராமல், மொத்தமாய்
விழுங்கிய சமத்துவ
கல்லறை நீ !!
இனி கவிஞனெவனும்
உன்னை வர்ணிக்க மாட்டொம்,
எமனை வர்ணிக்கும் பழக்கம்,
கவிஞனுக்கு இல்லை!!
இனி, ஞாயிறு மாலைகளில்
எங்கள் குழந்தைகளை
விளையாட அழைத்து வர மாட்டொம்,
சுடுகாட்டுக்கு யாரும்
விளையாட வருவதில்லை!!
இனி சிப்பியெடுக்கவும்
சங்கு பொருக்கவும்,
உன்னிடம் வர மாட்டொம்,
உனக்குள் புதைந்தவர்களை
முதலில் பொறுக்கிக் கொள்கிறோம்!!
மீண்டும் ஒருமுறை
கொந்தளிக்காதே!!
நிவாரணப் பணி
செய்ய வேறு யாருமில்லை!!
கடல் நீரைக் குடிநீராக்கப்
போகிறதாம் அரசு!!
கண்டிப்பாக விடமாட்டொம்,
உப்புக் கரித்தாலும் பரவாயில்லை
எங்கள் சொந்தங்களின்
ரத்தம் கரித்த நீரை
குடிக்க நாங்கள்
மிருகமில்லை!!
நீரின்றி அமையாது உலகு!!
முன்னோர்கள் கூறினார்கள்
இனி நாங்கள் கூறுவோம்,
நீரின்றி அழியாது உலகு!!












Click it and Unblock the Notifications