For Daily Alerts
Just In
அங்கிங்கெனாதபடி...
மறக்க நினைக்கிறேன்
மனதில்
நீ...
நினைக்க மறுக்கிறேன்
நினைவில்
நீ...
அழ முயல்கிறேன்
கண்களில்
நீ...
தூங்கி விடுகிறேன்
கனவில்
நீ...
சிந்திக்க ஆரம்பித்தேன்
சித்திரமாய்
நீ...
படிக்கத் துவங்கினேன்
பாடமாய்
நீ...
வார்த்தைகள் தேடினேன்
வாக்கியமாய்
நீ...
மலர் பறிக்கச் சென்றேன்
மாலையாய்
நீ...
உண்மை புரியவில்லையென்றேன்
உறுதியாய்
நீ...
கவிதைகள் எழுதினேன்
கருவாய்
நீ...
முடிவு தேடியலைந்தேன்
முற்றுப்புள்ளியாய்
நீ...
இப்படியாய்
அங்கிங்கெனாதபடி
என்னுள்ளெப்படி
என்னுள்ளெப்படி
எங்கும்
நிறைந்துள்ளாய்
தமிழே...
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]