நிலவின் புலம்பல்
பாடல், கவிதைகளில் என்னைப்
பாடாய்ப் படுத்தும் பாவலர்களே!
உங்களுக்குக்
கற்பனை வறண்டு போனால்
கன்னத்தில் எழுதுகோல் வைத்து
அண்ணாந்து பார்க்கின்றீர் ..!
சின்ன வெள்ளிப் பந்தாய் நான்
சிரித்தபடி மிதந்து செல்வது
பொறுப்பதில்லை உங்களுக்கு ..!
கன்னியரோ .. கழுதைகளோ..
என்னவாயிருந்தாலும்,
"வெண்ணிலவே! என்று நீங்கள்
விளித்து எழுதத் தொடங்கினாலே
வெலவெலத்துப் போகின்றேன்!
"ஆஹா .. ஆரம்பிச்சுட்டாங்க என
அலறியபடியே நான்
உலக உருண்டையின் நிழலில்
ஒளிந்து கொள்ள ஓடுகிறேன் ..!
அப்போதும் சளைக்காமல்
"பிறை நெற்றி, பிறைச் சிரிப்பு,
பிறைப் பருவம் என்றெல்லாம்
துரத்தித் துரத்திப் பிதற்றுகின்றீர்!
முற்றாக மறைந்தும் பார்த்தேன் ..
"அமாவாசைக் கூந்தல் என்று
அளந்து விடுகின்றீர் ..! அய்யகோ.. !!
நிறுத்திக் கொள்வீர் இதோடு என
நினைத்துக் கொண்டு
வெளியே வந்தால்
"வளர் பிறையே வா என்று
வாலாட்டத் தொடங்குகிறீர்..!
வான் கலத்தில் வந்து என் மேல்
கால் பதிப்பவர்களை விடவும்,
உங்கள் வார்த்தைகளைக் கண்டுதான்
அலறுகிறேன் .. பதறுகிறேன் ..!
அவ்வப்போது மேகத்துக்குள்
அவசரமாய் பதுங்குகிறேன்!
![]() மெதுவாக எட்டிப் பார்த்தால் கருங்கூந்தல் சூழ்ந்த அவள் "முகம் போல முகில் கிழிக்கும் முழு மதியே! என்று மீண்டும் முருங்கை மரம் ஏறுகின்றீர் ..! வேறெதையும் விடவும் - மொழி உங்களால் தான் மாதந்தோறும் எனக்காகப் பரிந்து பேசும் அவளுடைய அழகை நான் என்னை விட்டு வேறுபக்கம் - பனசை நடராஜன்,சிங்கப்பூர்([email protected])
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். |













Click it and Unblock the Notifications