என் விருந்தாளி- பத்மப்ரியா
சீராய் பெருக்கிய முற்றத்தில் - மீண்டும்
சின்னஞ்சிறு சிறகுகள் - இது அவற்றின் வேலைதான்
முடிந்தவரை ஓரிரு சிறகுகள்- என்
முற்றத்து எல்லைக்குள் விழும்படி
கவனமாய் கோதி காற்றினில் அனுப்பும்
கூடத்து கண்ணாடியில் முகம் பார்த்து திரும்பும்.
சீவி சிங்காரிக்க என் வீடுதான் கிடைத்ததா?
கோதுமை நிறத்திலொன்று -- மனைவி
அடர் நிறத்திலின்னொன்று - கணவன்
தம்பதியர் தங்குவதற்கு
தடையேதுமில்லை என்வீட்டில்
ஆனாலும் வேறு நல்ல வீடாய் பார்த்து கூடுகட்டி
அடிக்கடி வந்து போகும் என் முற்றம் தாண்டி
என்றைக்கேனும் சில மணி அரிசிகளைச் சிதறுவேன்
சிறு அலகால் கொத்துவதை அருகிருந்து பார்ப்பேன்
ஆனால் இனி கட்டாயம் பிடி அரிசி
தினம் தினம் சிதற வேண்டும் - ஏன் எனில்
கட்டுரையில் கரைந்திருந்தது இன்டியன் எக்ஸ்ப்ரஸ்
சிட்டுக்குருவியினம் 80 விழுக்காடு அழிந்து விட்டது
மீதமுள்ளதோ வெறும் 20 விழுக்காடு மட்டுமே
கண்ணீர் உப்பிட்டு கைப்பிடி அரிசியை வைத்தேன் - ஏனோ
காணவில்லை இதுவரை என் சிட்டுக்களை.
- பத்மப்ரியா([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications