For Daily Alerts
Just In
சாதிகள் உதிர்.. தேசம் ஆள்
கூனிக் கிடக்கும் தமிழன் - அயலார்
ஏறி மிதிக்கும்
ஏணி ஆனான்
கானல் பின்னே சென்று-தனது
காலத்தை விட்டான்,
கோலம் கெட்டான்
பழைய கதைகளைத் தமிழன்
பண்ணிப் பண்ணிப்
பேசித் தொலைத்தான்
புதிய உலகத்தை
உலகம் போக்குவரவால் சுருங்க
ஊடக வளர்ச்சியால்
கடுகாய்ச் சிறுத்தது.
ஆனாலும் உள்ளஞ் சிறுத்த உலகில்
யாதும் ஊரென
யாவரும் கேளிரென
ஏமாந்தவன் தமிழன்
அவன்தன் சாதிகளை உதிர்த்து விட்டால்
சமம் என ஒன்றிணைந்தால்
தேசத்தை ஆள்வான்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]