நினைவுகள்- ஷைலஜா
Subscribe to Oneindia Tamil
பூகம்ப நிலவெளியில்
புதைந்து விட்டாற் போல்
என்னுடையதான
உன் நினைவுகள்
குழப்பமான வண்ணக் கலவையாய்
ஓவியத்தில் நீயும்
வரைந்து முடித்து விட்டு
வார்த்த அச்சாய் வரும்
கையெழுத்துமாய் நானும் ..
பூவைப் பறிக்காதவரை
கவிதை வரிகளில்
செடிக்கும் இடமுண்டு
பனித்துளி மறையாதவரை
புற்கள் கவனிக்கப்படும்
நிலவு உள்ளவரை
நீல் வானம் நோக்கப்படும்
நிலைக்கண்ணாடி முன் நின்றால்
ஒரு உருவம், உடைந்து போனால்
ஒவ்வொன்றிலும் பல உருவம்
மறந்தாயோ மறைத்தாயோ?
மனமெல்லாம் உடைந்த
கண்ணாடியாய்
சிதறிக் கிடக்கிறது
உன் நினைவு!
([email protected])












Click it and Unblock the Notifications