For Daily Alerts
Just In
நனையும் அந்தக் குன்று
நீ சொல்லாது போய்விட்ட கவிதையை
வரிவரியாய் யோசிக்கின்றன வயல்கள்
வரிகளுக்கிடையில் உறையும்
மெளனத்தை கேட்கின்றன முகில்கள்
ஒரு பக்கத்தைப் புரட்டியது போல்
பறந்தது வெண்கொக்கு
கவிதை என்பது ஒரு நிகழ்வு
என்று நனைகிறது என் இருப்பு
கவிதையென்பது ஒரு தருணம்
எனக்காத்திருக்கிறது மழையில்
நனையும் அந்தக் குன்று.
(காடனூர், குடகில் ஒரு வயற்காட்சி. புகைப்படம்: Jens Eichler)
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]