For Daily Alerts
Just In
நதியாய் நீ..
ஒருநாள் ஒரு வண்ணத்துப் பூச்சி
என்னோடு வெகுதூரம் பறந்துவந்தது
இன்னொருநாள் அம்மாவின்
இடுப்பில் இருந்து
ஒரு குழந்தை கையசைத்தது
ஒரு நாள் பூக்காரச் சிறுமி
பூ வேண்டுமாவெனக் கேட்டாள்
எப்போதோ பயணித்ததை மகிழ்ச்சியாய்
நினைவுகூர்ந்தார் நான் மறந்திருந்த
ஆட்டோக்காரர்
ஒரு மழை ஓய்ந்த மாலையில்
சட்டென தலையில் விழுந்தது
நன்றாய் நனைந்திருந்த
பன்னீர்ப் பூவொன்று
அப்போதெல்லாம் என்னுள்
கசிந்த நன்றியின்
ஊற்றுக் கண்களுக்கு காரணம்
நதியாய் நீ அருகில்
ஓடிக்கொண்டிருந்ததால் தான்
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]