நதியாய் நீ..
Subscribe to Oneindia Tamil
ஒருநாள் ஒரு வண்ணத்துப் பூச்சி
என்னோடு வெகுதூரம் பறந்துவந்தது
இன்னொருநாள் அம்மாவின்
இடுப்பில் இருந்து
ஒரு குழந்தை கையசைத்தது
ஒரு நாள் பூக்காரச் சிறுமி
பூ வேண்டுமாவெனக் கேட்டாள்
எப்போதோ பயணித்ததை மகிழ்ச்சியாய்
நினைவுகூர்ந்தார் நான் மறந்திருந்த
ஆட்டோக்காரர்
ஒரு மழை ஓய்ந்த மாலையில்
சட்டென தலையில் விழுந்தது
நன்றாய் நனைந்திருந்த
பன்னீர்ப் பூவொன்று
அப்போதெல்லாம் என்னுள்
கசிந்த நன்றியின்
ஊற்றுக் கண்களுக்கு காரணம்
நதியாய் நீ அருகில்
ஓடிக்கொண்டிருந்ததால் தான்












Click it and Unblock the Notifications