என்ன பிழை செய்தோம்?- ரா.விமலன்
இயற்கைக்கும் மனிதனுக்கும் இருக்கும் சொந்தம்
இயங்குகின்ற நிலவுலகில் எதற்கு மில்லை;
செயற்கைக்குள் மனிதன்தான் சிக்கிக் கொண்டு
செம்மாந்த வாழ்வுதனை வாழும் போதும்
இயற்கைதான் அவனுக்குத் தாயாய் நிற்கும்
இயங்குகின்ற வழிதோறும் ஒளியை வீசும்!
இயற்கையைத் தெய்வமென நம்பி வாழ்ந்தான்
இருந்தாலும் பலிகடாவாய் அவனே ஆனான்!
அலைவீசும் கடலைத்தான் அவனிக் கீந்து
அடிவயிற்றுக் கஞ்சிக்கும் வழியைக் காட்டி
கலைபேசும் எழிலுருவாய்க் காட்சி தந்து
களைப்புக்கும் களிப்புக்கும் களமாய்த் தோன்றி
நிலையுயர்ந்த செல்வமென நிற்கும் நங்கை
நீங்காத பெரும்பழியைச் சுமந்து விட்டாள்!
மலையுயரப் பேரலையாம் "சுனாமி" தன்னால்
மாந்தர்தம் உயிர்பறித்தாள் பேயாய் மாறி!
![]() கடலலையில் கிளிஞ்சல்தாம் கரையொ துங்கும் கணக்கில்லாச் சடலங்களின் குவியல் கண்டோம்! சுடலையில் தனிப்பிணந்தான் புதைத்து வந்தோம் சுருண்டுவிட்ட பலபிணங்கள் சுடலை தோறும் படையழிந்த களம்போல காட்சி நல்கும்; பயமூட்டும் பேரலையின் படையெடுப்பால்! நடையழிந்த கிராமங்கள் சிலவற்றோடு நடமாடும் ஜீவன்கள் பலவும் காணோம்! என்னபிழை செய்துவிட்டோம்? இறையே நாங்கள்! செலவுசெய்யும் பொருளாக உயிர்கள் இல்லை; - ரா.விமலன்([email protected]) படைப்புகளை அனுப்ப: கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். |













Click it and Unblock the Notifications