மழை வேண்டாம்!!
- முபாரக் ரஸ்வி
பொழிந்ததாம் மழை
மும்மாரி முன்பு!
வேண்டவே வேண்டாம் - என
மனம் வெதும்பியே
சொல்கிறோம்!
ஒரு மணிநேரம்
விடாது பெய்தாலே
வாசல் வழியே
வந்த மழை நீர்
வடிவதற்கு ஆகிறது
மூன்று நாட்கள்!
வருடத்திற்கு ஒரு முறை
சுற்றுலா செல்பவர்கள்..
வெனிஸ் நகராய்
வெள்ளம் சூழ்ந்த
எங்கள் இடத்தை
வேகமாய் பார்க்க வரலாம்...
சுற்றுலாவாசிகள்
வராவிட்டாலும்
சுகாதார அமைச்சர்கள்
சுறுசுறுப்பாய்
சுற்றி வருபவர்கள்
பத்திரிக்கைகளில்
படத்தை பதிவு செய்ய...
சாக்கடைகளும்
சமாச்சாரங்களும்
சகலமாய்
கலந்து வரும்
குடி தண்ணீர்
குழாயிலே...
தரையிலே தடுமாறாமல்
ஓட்டத் தெரிந்தவரை விட
தண்ணீரிலே தடுமாறாமல்
ஓட்ட தகுதியுள்ளவர்கள் மட்டுமே
தங்க வேண்டிய பகுதி இது...
வரும் சுனாமியை
கண்டறியும் கருவியை விட
இருக்கும் பாதாள சாக்கடைகளை
கண்டறியும் கருவி
கண்டிப்பாய் வேண்டும்!
மழை பொழிந்தாலே-எங்கள்
குலை நடுங்கும் - இந்த
மழை எங்களுக்கு
வேண்டவே வேண்டாம்!!
- முபாரக் ரஸ்வி([email protected])












Click it and Unblock the Notifications