கலங்காதே கண்மணியே....-புதியவன் முதலை மீது ஏறி்சவாரி செய்பவன்முள் குத்தியதற்கு வருந்துவானா?கடலை அளக்ககால்களை விரித்தவனைஅலைகளின் முத்தங்கள் என்ன செய்து விடும்?சிங்கத்தின் குகைகள் சிலிர்ந்து நிற்பவன்சிலந்தியைக் கண்டு அச்சம் கொள்வானா?சிரமங்களின் வலியால் மட்டுமே சிகரங்களின் வழி தெரியும்.உள்ளத்தின் காயங்களேவெற்றியின் உயரத்தைக் காட்டும்கருவறையும் இருட்டறை கல்லறையும் இருட்டறைஇடைப்பட்ட காலத்தில் மட்டும்இருட்டறை கண்டு பயம் ஏனோ?காலத்தின் கரங்களில் நீ சிக்கினால் வெற்றியின் தூரம்வெகுதூரம்.காலம்உனது கரங்களுக்குள் சிக்கினால்தோல்வியின் தூரம் தொலைதூரம்.கலங்காதே கண்மணியே...நம்பிக்கை கால்களின் கீழேகவலைகள் என்றும் கால் தூசி. மனதில் நம்பிக்கை உறுதிகொண்டால்மரணம்கூட மண்டியிட்டு நிற்கும்.

Subscribe to Oneindia Tamil

முதலை மீது ஏறி்
சவாரி செய்பவன்
முள் குத்தியதற்கு
வருந்துவானா?

கடலை அளக்க
கால்களை விரித்தவனை
அலைகளின் முத்தங்கள்
என்ன செய்து விடும்?

சிங்கத்தின் குகைகள்
சிலிர்ந்து நிற்பவன்
சிலந்தியைக் கண்டு
அச்சம் கொள்வானா?

சிரமங்களின் வலியால் மட்டுமே
சிகரங்களின் வழி தெரியும்.
உள்ளத்தின் காயங்களே
வெற்றியின் உயரத்தைக் காட்டும்

கருவறையும் இருட்டறை
கல்லறையும் இருட்டறை
இடைப்பட்ட காலத்தில் மட்டும்
இருட்டறை கண்டு பயம் ஏனோ?

காலத்தின் கரங்களில்
நீ சிக்கினால்
வெற்றியின் தூரம்
வெகுதூரம்.

காலம்
உனது கரங்களுக்குள் சிக்கினால்
தோல்வியின் தூரம் தொலைதூரம்.

கலங்காதே கண்மணியே...
நம்பிக்கை கால்களின் கீழே
கவலைகள் என்றும் கால் தூசி.
மனதில் நம்பிக்கை உறுதிகொண்டால்
மரணம்கூட மண்டியிட்டு நிற்கும்.

-புதியவன்
([email protected])

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+