For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சியில் திருக்குறள் பேச்சுப் போட்டி

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சியில் ஆகஸ்ட் 9ம் தேதி ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே திருக்குறள் பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ஜார்ஜ் ஸ்டீபன் கூறியதாவது:

"திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 9-ம் தேதி திருக்குறள் பேச்சுப்போட்டி நடக்கிறது. தவிர, சென்னையில் ஜூலை 19-ம் தேதியும், வேலூரில் 20-ம் தேதியும், கோவையில் 26-ம் தேதியும், சேலத்தில் 27-ம் தேதியும், திருநெல்வேலியில் ஆக. 2-ம் தேதியும், மதுரையில் 3-ம் தேதியும், புதுச்சேரியில் 10-ம் தேதியும் நடத்தப்படவுள்ளது.

இதில், பள்ளி மாணவர்களுக்கு இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை என 3 பிரிவுகளாகவும், கல்லூரி மாணவர்களுக்குத் தனியாகவும் என மொத்தம் 4 பிரிவுகளாக நடத்தப்படுகிறது.

இடைநிலைப் பிரிவில் 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளும், உயர்நிலைப் பிரிவில் 9, 10-ம் வகுப்பினரும், மேல்நிலைப் பிரிவில் 11, 12-ம் வகுப்பினரும், கல்லூரிப் பிரிவில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு, பாலிடெக்னிக் மாணவ- மாணவிகளும் கலந்து கொள்ளலாம்.

ஒரு பள்ளியில் இடைநிலையில் 6 பேரும், உயர்நிலை, மேல்நிலையில் தலா 4 பேரும், கல்லூரிப் பிரிவில் இளநிலைப் பட்டப் படிப்பில் 4 பேரும், முதுநிலைப் பட்டப் படிப்பில் 2 பேரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். அனைத்து நகரங்களிலும் காலையில் முதல் சுற்றும், பிற்பகலில் அரை இறுதிச் சுற்றும் நடைபெறும். இறுதிச் சுற்று சென்னையில் ஆக. 30-ம் தேதி நடத்தப்படும்.

முதல் பரிசு ரூ. 5,000, இரண்டாம் பரிசு ரூ. 3,000, மூன்றாம் பரிசு ரூ. 2,000 வழங்கப்படும். இதில், பங்கு பெற விரும்புவோர் அருகிலுள்ள ஸ்ரீராம் சிட்ஸ் கிளையில் விண்ணப்பம் பெற்று ஜூலை 10-ம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431- 4210150 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என ஜார்ஜ் ஸ்டீபன் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X