கண்ணீர் துளிகள்
Subscribe to Oneindia Tamil
-கம்பம் வீ.சண்முகசுந்தரம்
இதோ புறப்பட்டுவிட்டேன்
சுற்றத்தையும் அழைத்துக்கொண்டு
கட்டிகாத்த கண்ணைவிட்டு,
கண்ணின் கருமணியை விட்டுவிட்டு.
அதோ இமைகள்
இன்முறுவலோடு
வழியனுப்ப வாய் விரிக்கின்றன
இன்பமோ, துன்மோ
இதயம் இளகும் போது
மனிதன் உண்டாக்கும்
மழைநீர் நான்.
விழிகளே!
விளம்பரப்ப்டுத்தாதீர்கள்
விதியதன் விடியலை.
மறுபடி மாறுகின்றது
மனிதனின் மனம்.
புறப்படுகிறேன்
புதியதோர் கண்ணீர்துளி
உருவாக...
-கம்பம் வீ.சண்முகசுந்தரம் ([email protected])












Click it and Unblock the Notifications