நீ வருவாய் என..,
-மதுக்கூர். முஹம்மது ரூமி
திசைமாறி சென்ற படகை போல...
வாழ்க்கை யெனும் தடத்திற்கு செல்ல திசையறியாமல் தடுமாறினேன்...
திருப்புமுனை குரல் ஒன்று என் செவிகளுக்கு கேட்கவே...
திரும்பிபார்த்தேன்?!?!?.. என் அருகில் நீ!!!
ஈர்ப்புவிசை கொண்ட உன் கரங்களோடு... என் கரங்களும் இணைய....
நம் பயணத்தை தொடர்ந்தோம்...
மகிழ்ச்சி யெனும் மறு உருவத்தை அப்பயணத்தின் பொழுது தான் கண்டேன்...
நாம் கடந்துக் கொண்டிருக்கும் பாதையில்!!!
காழ்ப்புணர்ச்சி கொண்ட காளான்கள் செய்த சதி "பிரிவு" என்னும் விபத்து....
'வலி" எனும் சொல்லுக்கு பொருள் உணர்ந்தேன்...அன்று...
நீ சிக்கி விட்டாயே அந்த வலையில்...
உன் சிறகுகளை சிறையிட்டுவிட்டார்களே...கூக்குரலிடும் என் குரலை நீ செவியேற்க் முடியாமல்!!
உன் செவிகளை செப்பணித்து விட்டார்களே...
அந்தோ பரிதாபம்...
தடை போடும் அந்த கற்கள் அறியுமோ... உண்மையான பாசத்தை...
காலம் கனியும் போது அக்கற்களும் கறையும்...
மீண்டும் நாம் பயணிப்போம்...நமது பாதையில்...
நம்பிக்கையுடன் நான் திரும்பிபார்க்கிறேன்... தோழி!!!
நீ வருவாய் என..
-மதுக்கூர். முஹம்மது ரூமி([email protected])