For Quick Alerts
For Daily Alerts
Just In
உனக்காகவே என் விடியல்...!
ஆனந்தமாய் இருக்கின்றன…
நீ அருகில் இருப்பதனால் !
என் தலை கோதி
முத்தமிட்டு எழுப்புகிறாய்….
இன்னொரு முத்தம் பெறவேண்டி
பொய்யாய் உறங்குகிறேன்….
புரிந்தும் புரியாததுபோல்
உன் மீசை முடியால் கன்னத்தில் அழுத்தி
என்னை எழுப்புகிறாய்…
ஆனந்தமுடன் விடிகிறது
என் அதிகாலை !
உன் மடி மீது உறங்கிப்போகும் நான்
உன் முகம் பார்த்தே தினம் எழுகின்றேன்!
அதனாலேயே அதிகாலை தொடங்கி
அந்திப் பொழுது வரை
ஆனந்தமாய் கழிகின்றன
நமக்கான நாட்கள்.
English summary
A love poem by a wife to her husband in a romantic way.
Story first published: Friday, February 3, 2012, 10:22 [IST]