"அடர்மழை காடு"
சென்னை: வாசகர்களுக்கு ஒரு இயற்கை கவிதை . எழுதியவர் நமது வாசகர் மாணிக்கம் விஜயபானு, ஆஸ்டின்.
அடர்மழை காடு
கருமேகம் உடைத்து
மலைமுகட்டில் தெறித்து
அடர் காடெங்கும் அதிர
சிறுதுளி புனலாய்
வழிந்து
பெருவெள்ளமாகும்
நெளிந்து வளைந்து
பாறை தழுவி
வனப்பரப்பில்
ஆற்று படுக்கையாகும்
சிலிர்த்த மரத்தின்
நுனிக்கிளை தழுவி
நீர் அடிவேர் பற்றி பரவும்

அதில்
அக்கானகமெங்கும்
பசுமை நிரப்பும்
இளைத்த கிளையோரம்
இளைப்பாறும் பறவையின்
கூர்த்த நுனியில்
நீர் தாரை ஒழுகும்
சிறுத்த சிறகோடு
பறந்திட்ட எச்சமெங்கும்
விதையாகும்
பெரும் வனமாகும்
நீரை உண்டு கழித்த
மக்கிய புல்லும்
மண்ணில் உரமாகும்
அடர் மயிரோடு
அசைந்து திரிந்த
வரிப்புலி
குருதிகொண்ட வாய் நனைக்கும்
குட்டியோடு
குளிர்ந்த நடுநிசியில்
வெப்பம் வனத்தில் கரைய
மீண்டும் பெரும் மழைக்கு
காத்திருக்கும்
ஒரு
பெரும் காடு
-மாணிக்கம் விஜயபானு
டெக்சாஸ். ஆஸ்டின்












Click it and Unblock the Notifications