Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அடர்மழை காடு"

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாசகர்களுக்கு ஒரு இயற்கை கவிதை . எழுதியவர் நமது வாசகர் மாணிக்கம் விஜயபானு, ஆஸ்டின்.

அடர்மழை காடு

கருமேகம் உடைத்து
மலைமுகட்டில் தெறித்து
அடர் காடெங்கும் அதிர
சிறுதுளி புனலாய்
வழிந்து
பெருவெள்ளமாகும்

நெளிந்து வளைந்து
பாறை தழுவி
வனப்பரப்பில்
ஆற்று படுக்கையாகும்

சிலிர்த்த மரத்தின்
நுனிக்கிளை தழுவி
நீர் அடிவேர் பற்றி பரவும்

A poem by our reader

அதில்
அக்கானகமெங்கும்
பசுமை நிரப்பும்

இளைத்த கிளையோரம்
இளைப்பாறும் பறவையின்
கூர்த்த நுனியில்
நீர் தாரை ஒழுகும்

சிறுத்த சிறகோடு
பறந்திட்ட எச்சமெங்கும்
விதையாகும்
பெரும் வனமாகும்

நீரை உண்டு கழித்த
மக்கிய புல்லும்
மண்ணில் உரமாகும்

அடர் மயிரோடு
அசைந்து திரிந்த
வரிப்புலி
குருதிகொண்ட வாய் நனைக்கும்
குட்டியோடு

குளிர்ந்த நடுநிசியில்
வெப்பம் வனத்தில் கரைய
மீண்டும் பெரும் மழைக்கு
காத்திருக்கும்
ஒரு
பெரும் காடு

-மாணிக்கம் விஜயபானு
டெக்சாஸ். ஆஸ்டின்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+