டெக் வேலைகளை.. அப்படியே விழுங்கும் AI! லே ஆஃப் இனி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும்!
சென்னை: தொழில்நுட்ப நிறுவனங்கள் AI-ஐ நோக்கித் தங்கள் உத்திகளை மாற்றியமைத்தல், செலவுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப தங்களைச் சீரமைத்தல் ஆகிய காரணங்களால், ஆட்குறைப்பு நடவடிக்கைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. தற்போது நடந்து வரும் லேஆஃப்களுக்க காரணமே இதுதான்.
கடந்த ஆண்டு 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் சுமார் 1,50,000-க்கும் அதிகமானோர் வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறனர். வெறுமென ஆட்குறைப்பு மட்டுமட்டுமல்லாது துறை வேலைகளே நீக்கப்பட்டிருக்கின்றன. இந்த எண்ணிக்கை மேலும் பல ஆயிரங்களாக அதிகரிக்கும் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.

வேலைகளை தானியங்கி முறையில் செய்தல், குறைவான லாபம் தரும் அல்லது பழைய திட்டங்களை நீக்குவது, ஹார்டுவேர், எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் விளம்பரங்களை அடிப்படையாகக் கொண்ட தளங்களில் செலவுகளைக் குறைத்து லாபத்தை மீட்டெடுத்தல் போன்ற காரணங்களுக்காக இந்த பணி நீக்கங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
அமேசான் நிறுவனம் பணி நீக்கத்தை தொடர்ந்து செய்து வரும் நிறுவனமாகும். பல கட்டங்களில் ஆட்குறைப்புகளைத் தொடர்கிறது. அதேசமயம் AI துறையில் மட்டும் பணியமர்த்தலைத் தொடர்கிறது. கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்டு, பிக்சல் மற்றும் குரோம் பிரிவுகளில் ஆட்குறைப்புகளைச் செய்துள்ளது. கிளவுட் பிரிவில் 100-க்கும் மேற்பட்ட வடிவமைப்புப் பணிகளை நீக்கி, AI மற்றும் உள்கட்டமைப்பு முதலீடுகளில் ஊழியர்களைப் பயன்படுத்துகிறது.
மெட்டா நிறுவனம் ரியாலிட்டி லேப்ஸில் ஆட்குறைப்புகளைச் செய்துள்ளது. அடுத்த தலைமுறை AI தயாரிப்புகளில் கவனம் செலுத்த முயல்கிறது. இன்டெல் போன்ற நிறுவனங்கள் மறுசீரமைப்பு மற்றும் செலவுக் கட்டுப்பாடு காரணமாக ஆட்குறைப்பு செய்கின்றன. என்விடியா நிறுவனம் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் காரணமாகப் பணியாளர்களை நீக்கி, வளங்களை முக்கியமான திட்டங்களுக்கு மாற்றியுள்ளது.
- அமேசான் 30,000
- இன்டெல் 24,000
- வெரிசோன் 15,000
- மைக்ரோசாப்ட் - 15,000
- அசென்சர் - 12,000
- டிசிஎஸ் - 12,000
- பானசோனிக் - 10,000
- செவ்ரான் - 10,000
- எஸ்டி லாடர் - 7,000
- டெலிபோனிக்கா - 6,000
பல நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரியாத ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். என்னதான் பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், எதிர்காலத்தில் ஏஐ எனும் குமிழ் திடீரென வெடிக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
-
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
இந்தியர்களுக்கு பெரிய ஆப்பு.. H-1B விசா ரூல்ஸை மொத்தமாக மாற்றும் டிரம்ப்! இது தேவையில்லாத வேலையாச்சே












Click it and Unblock the Notifications