வச்சி செய்யப்போகும் ஏஐ.. இனி மிடில் கிளாஸ் என்ற வர்க்கமே இருக்காது! எச்சரித்த கூகுள் நிறுவன நிர்வாகி
சென்னை: ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையால் வரும் காலத்தில் பெரும் ஆபத்து இருப்பதாகவும் மிடில் கிளாஸ் எனப்படும் நடுத்தர வர்க்கம் என்ற ஒன்று இருக்காது, ஒன்று பெரும் பணக்காரர் அல்லது ஏழையாக மட்டுமே இருக்க முடியும் என்று திடுக்கிடும் தகவல்களை கூகுள் நிறுவனத்தின் முன்னாள் உயரதிகாரி வெளியிட்டுள்ளார்.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில் நுட்ப உலகில் பெரும் புரட்சியையே ஏற்படுத்திவிட்டது என்று சொல்லலாம். ஏஐ பயன்பாட்டால் ஒருபக்கம் எத்தனையோ பயன்கள் ஏற்படுவதாக சொல்லப்பட்டாலும் இன்னொரு பக்கம் மனிதர்களின் வேலைகளை திருட ஆரம்பித்துவிட்டது.

ஏஐயால் நடுத்தர வர்க்கம் இருக்காது
செயற்கை நுண்ணறிவால் வரும் காலத்தில் மிடில் கிளாஸ் என்ற வர்க்கமே இருக்காது என்று கூகுள் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரி திடுக் தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என கூகுள் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரி மோ காவ்தத் எச்சரித்துள்ளார்.
ஏஐ காரணமாக வேலைகள் கணிசமாக குறையும் என்றும், இதனால் நடுத்தர வர்க்கம் என்ற ஒன்றே இல்லாமல் போகும் என்றும் அவர் கூறியுள்ளார். 2018 ஆம் ஆண்டு கூகுள் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியாக இருந்த காவ்தத், இந்த திடுக் தகவலை கூறியுள்ளார். வரும் 2027 முதல் நிலைமை மோசமடையத் தொடங்கும் எனக் கணித்துள்ளார்.
சமூக பிளவுகள் ஏற்படும்
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் சமூக அமைதியின்மை ஏற்படும் என்றும் மக்கள் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையின் நோக்கத்தையும் இழப்பதால் மனநலப் பிரச்சினைகள் அதிகரித்து, தனிமை உணர்வும், சமூகப் பிளவுகளும் ஆழமடையும் என்றும் எச்சரித்து உள்ளார். "நீங்கள் டாப் 0.1% பணக்காரர்களுக்குள் இல்லையென்றால், நீங்கள் ஒரு ஏழை விவசாயியாகத்தான் இருக்க வேண்டும். நடுத்தர வர்க்கம் என்பதே இருக்காது.
ஒயிட் காலர் ஜாப்ஸ் எனப்படும் வெள்ளை காலர் வேலைகள், அதாவது மென்பொருள் உருவாக்குநர்கள், சிஇஓ-க்கள், பாட்காஸ்டர்கள் என யாரும் ஏஐ-யின் தாக்கத்திலிருந்து தப்ப முடியாது. அடுத்த 15 ஆண்டுகள் சொர்க்கத்தை அடைவதற்கு முன் நரகமாக மாறிவிடும்" என்று தெரிவித்தார். தனது Emma.love என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உதாரணமாகக் காட்டி இவ்வாறு பேசியுள்ளார் காவ்தத்.
தனெக்கென ஒரு மொழியை உருவாக்கும்
உணர்ச்சி மற்றும் உறவுசார் AI-யை உருவாக்கும் இந்த நிறுவனத்தை மூன்று பேர் மட்டுமே நிர்வகிப்பதாக அவர் குறிப்பிட்டார். "முன்பு இந்த மாதிரி ஸ்டார்ட்அப்களுக்கு 350 டெவலப்பர்கள் தேவைப்பட்டிருப்பார்கள். பாட்காஸ்டர்கள் கூட ஏஐ-யால் மாற்றப்படுவார்கள் " என்று அவர் சுட்டிக்காட்டினார். இதற்கிடையே, 'ஏஐ-யின் காட்பாதர்' என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன், ஏஐ விரைவில் தனக்கென ஒரு மொழியை உருவாக்கிக்கொள்ளும் என்றும், இதனால் மனிதர்களால் இயந்திரங்களைக் கண்காணிக்க முடியாமல் போகும் என்றும் எச்சரித்துள்ளார்.
இயந்திரங்கள் சிந்திப்பது சாத்தியம்
அதாவது, "இயந்திரங்கள் ஒன்றுடன் ஒன்று பேச தங்கள் சொந்த உள் மொழிகளை உருவாக்கினால் அது இன்னும் பயங்கரமானது. அவை சிந்திக்க தங்களுக்குள் ஒரு மொழியை உருவாக்கிக் கொண்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன், அப்போது அவை என்ன நினைக்கின்றன என்பது நமக்குத் தெரியாது. AI ஏற்கனவே பயங்கரமான எண்ணங்களை உருவாக்கக்கூடிய திறனை வெளிப்படுத்தியுள்ளது. மனிதர்களால் கண்காணிக்க முடியாத வகையில் இயந்திரங்கள் சிந்திப்பது சாத்தியமே" என ஹிண்டன் தெரிவித்தார்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications