ChatGPT முடங்கியது.. உலகம் முழுவதும் ஏற்பட்ட திடீர் பிரச்சனை.. மக்கள் அவதி - என்ன காரணம்?
வாஷிங்டன்: ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி இன்று திடீரென்று முடங்கி உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சாட்ஜிபிடி முடங்கி உள்ளதால் அதனை பயன்படுத்தி வரும் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
தற்போது பல்வேறு ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவுகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதில் ஒன்று தான் சாட்ஜிபிடி. இது ஓபன் ஏஐ எனும் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். இந்தியா மட்டுமின்றி நாடு முழுவதும் சாட்ஜிபிடியை ஏராளமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தங்களுக்கு இருக்கும் சந்தேகம், பணிக்கான டேட்டா, பணிக்கான கோடிங், பைல் ஆவணங்களை கேட்டால் இந்த சாட்ஜிபிடி வழங்கிவிடும். இதனால் ஒவ்வொரு நாளும் சாட்ஜிபிடியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில், சாட்ஜிபிடி சேவை இன்று திடீரென முடங்கி உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சாட்ஜிபிடி முடங்கி உள்ளது. இதனால் அதனை பயன்படுத்தி வருவோர் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications