இந்தியாவின் செலவை அமெரிக்க ஏன் ஏற்கணும்? மீண்டும் சர்ச்சையை கிளப்பிய டிரம்ப் அரசு.. ஓவர் பேச்சு
வாஷிங்டன்: AI துறையில் அமெரிக்கா தான் இப்போது முன்னணியில் இருக்கிறது. இதற்கிடையே இந்தியாவில் ஏஐ சேவைகளை வழங்க ஆகும் செலவை ஏன் அமெரிக்கர்கள் ஏற்க வேண்டும் என டிரம்ப் தரப்பு கேள்வி எழுப்பி இருக்கிறது. இது குறித்து டிரம்பின் வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இப்போது ஏஐ துறையில் அமெரிக்க நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சாட்ஜிபிடி, ஜெமினி, க்ரோக் என அமெரிக்க நிறுவனங்களே இப்போது ஏஐ சந்தையில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிலும் கூட வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ மீண்டும் சர்ச்சைக்குரிய சில கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் ஏஐ சேவைகள்
இந்தியாவின் ஏஐ சேவைகளை வழங்க ஆகும் செலவை ஏன் அமெரிக்கர்கள் ஏற்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சாட்ஜிபிடி போன்ற தளங்கள் அமெரிக்க மண்ணில், அமெரிக்க மின்சாரத்தைப் பயன்படுத்திச் செயல்படுவதாகவும், ஆனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள மக்களுக்கே முக்கியமாகச் சேவைகளை வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
'ரியல் அமெரிக்கா வாய்ஸ்' என்ற நிகழ்ச்சியில் பேசியபோது நவரோ இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். அப்போது தான் வெளிநாடுகளில் உள்ள AI சேவைகளுக்கு அமெரிக்க வளங்கள் பயன்படுத்தப்படுவது குறித்து கவலை தெரிவித்தார். அவரது இந்தக் கருத்துக்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய விவாதமாக மாறியுள்ளது.
அமெரிக்கர்கள் ஏன் ஏற்க வேண்டும்?
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "இந்தியாவில் AI சேவைகளைக் கொடுக்க ஆகும் செலவை அமெரிக்கர்கள் ஏன் ஏற்க வேண்டும்? சாட்ஜிபிடி அமெரிக்க மண்ணில் செயல்பட்டு, அமெரிக்க மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. ஆனால், இந்தியா, சீனா மற்றும் உலகின் பிற பகுதிகளில் உள்ள மக்களுக்கே அதிக அதிக சர்வீஸை கொடுக்கிறது. இதைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும்" என அவர் குறிப்பிட்டார்.
மேலும், வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்க விவசாய நிலங்களை வாங்குவது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். பல சர்வதேச நிறுவனங்கள் அமெரிக்காவில் விவசாய நிலங்களின் அசல் விலையைக் காட்டிலும் பத்து மடங்கு அதிக விலைக்கு நிலங்களை வாங்குகின்றன என்றும், இது அமெரிக்காவில் உணவுப் பணவீக்கத்தை மோசமாக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்தியா அமெரிக்கா கருத்து
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதாகச் சொல்லி இந்தியா மீது அமெரிக்கா 50% வரியை விதித்துள்ளது. மேலும், இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இரு தரப்பிற்கும் இடையே உராய்வு தொடரும் நிலையில், நவரோ இந்தக் கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
சர்ச்சை கருத்து
அதேநேரம் நவரோ இதுபோன்ற கருத்துகளைக் கூறுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில், இந்தியாவின் வர்த்தக நடைமுறைகள் மற்றும் உற்பத்தி கொள்கைகள் குறித்து அவர் பல சர்ச்சை கருத்துகளை கூறியிருக்கிறார். இந்தியா நியாயமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூட கூறியிருந்தார்.
மேலும், உக்ரைனில் ரஷ்யாவின் போரை இந்தியா தூண்டிவிடுவதாகக் கூறிய நவரோ, ரஷ்யக் கச்சா எண்ணெய்யை இந்தியா தொடர்ந்து இறக்குமதி செய்வதை விமர்சித்தார். உக்ரைன் போரில் இந்தியாவின் பங்கைக் குறித்துப் பேசிய அவர், இந்தியாவை ரஷ்யாவின் சலவை நிலையம் என்றும் வரிகளின் மகாராஜா என்றும் விமர்சித்திருந்தார்.. மேலும், ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை ரத்தப் பணம் உக்ரைன் மோதலை மோடியின் போர் என்றும் அழைத்தார்.
-
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம்












Click it and Unblock the Notifications