டெல்லியில் இன்று தொடங்கும் ஏஐ உச்சி மாநாடு.. குவியும் உலக தலைவர்கள்! ஏன் முக்கியம் தெரியுமா?
டெல்லி: டெல்லியில் இன்று ஏஐ உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இன்று முதல் வரும் 20 ஆம் தேதி வரை 5 நாட்கள் ஏஐ உச்சி மாநாடு நடக்கிறது. ஏஐ உச்சி மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரேசில், பிரான்ஸ் உள்பட 45 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.
ஏஐ டெக்னாலஜி தகவல் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியையே ஏற்படுத்திவிட்டது. பல்வேறு துறைகளிலும் ஏஐ பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அலுவல் பணி மட்டும் இன்றி மருத்துவம், பாதுகாப்புத்துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தாக மாறத்தொடங்கியுள்ளது.

ஏஐ உச்சி மாநாடு
செயற்கை நுண்ணறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக செயற்கை நுண்ணறிவு மாநாடு நடத்தப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு பிரிட்டனில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. பிரிட்டனில் உள்ள பக்கிங்ஹாம் ஷயர் பிளெச்லி பூங்காவில் நடைபெற்றது.
2024-ல் தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்றது. கடந்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் ஏஐ உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த ஏஐ மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
20 நாடுகளின் தலைவர்கள்
5 நாட்கள் இந்த மாநாடு நடைபெறும். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியா குத்ரோஸ், இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க, பிரேசில் அதிபர் லூயிஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேகிறார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் அபுதாபி பட்டத்து இளவரசர் காலித் பின் முகமது அல்நயான் கலந்து கொள்கிறார்.
மொத்தம் 20 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார்கள். அதேபோல டாப் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உதாரணமாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித், ஓபன் ஏஐ சி இஓ சாம் அல்ட்மேன் உள்ளிட்ட ஏஐ நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.
300-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள்
மக்கள், பூமி, வளர்ச்சி என்பதை மையக்கருத்தாக கொண்டு இந்த ஏஐ மாநாடு நடைபெறுகிறது. ஏஐ தொழில்நுட்பம், அறிவியல் - ஆராய்ச்சி, புதுமை கண்டுபிடிப்பு உள்ளிட்ட 7 துறைகளில் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் சுமார் 3,500 ஏஐ தொழில்நுட்ப நிபுணர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.
அதேபோல, இந்தியா ஏஐ இம்பாக்ட் எக்ஸ்போ 2026 கண்காட்சியும் இன்று தொடங்குகிறது. 10 பெரிய அரங்குகளில் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் 300 க்கும் மேற்பட்ட பிரத்யேக கண்காட்சி அரங்குகள் மற்றும் நேரடி செயல்முறை விளக்கங்கள் நடைபெறும். உலகளாவிய தொழில் நுட்ப நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் அரசு அமைப்புகள் பங்கேற்க உள்ளன.
இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
குறிப்பாக ஹைடெக் நிறுவனங்கள் தங்களின் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்த உள்ளன. ரஷ்யா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 13 நாடுகளின் பிரத்யேக தூதரக அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இன்று மாலை 5 மணியளவில் இந்த கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ஏஐ துறையில் புதிய வணிக வாய்ப்புகள் உருவாக்கவும் உலகாளாவிய கூட்டாண்மையை வலுப்படுத்தும் முயற்சியாகவும் இந்த கண்காட்சி முக்கிய பங்காற்றும் என்று தெரிகிறது.
-
ராஜ்யசபா சீட் கேட்டு தமிழக காங்கிரஸ் சீனியர்கள் டெல்லியில் முகாம்! சந்திக்க மறுக்கும் ராகுல் காந்தி? -
மவுனம் காப்பது நடுநிலை இல்லை.. ஈரான் விவகாரம்: உங்க நிலைப்பாடு என்ன? மோடிக்கு சோனியா காந்தி கேள்வி -
லண்டன் டூ சென்னை.. ரூ. 400 கோடி சொத்து.. சங்கீதாவின் 'சைலண்ட்' சாம்ராஜ்யம்? எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்! -
ரூ.160 லட்சம் கோடி.. உலகப் பொருளாதாரத்தின் 'இதயத் துடிப்பை' நிறுத்திய ஈரான்.. அராம்கோ மீதே அட்டாக்! -
கடைசியில் ஒரு வழியா வருது.. சென்னை லூலூ மால்.. தொடங்குது கட்டுமானம்.. எங்கே வருது தெரியுமா? -
ஈரான் எதிர்பாராத அட்டாக்.. பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெரிய கேஸ் ஆலைகள் மூடல்! உலகிற்கே பாதிப்பு -
ராகுலுக்கு செக்.. செங்கோட்டையை நோக்கி ‘சூரியன்’.. ஸ்டாலினின் 3வது அணி ரெடி.. உடையும் இந்தியா கூட்டணி -
வேற யாராவதுன்னா ஜெயில்தான்.. விஜய்யை கட்டிப்போட்ட அந்த 25 பேஜ்.. அதிர்ச்சி தரும் 4 முக்கிய புகார்கள்! -
வாயை கூட திறக்காத சீனா.. ஈரான் விவகாரத்தில் ட்விஸ்ட் கொடுக்கும் ஜின்பிங்.. என்ன மேட்டர் தெரியுமா? -
99% எல்லாம் ஓவர்.. 24 மணி நேரம்தான் டைம்.. ராகுல் காந்திக்கு ஸ்டாலின் டெட் லைன்.. காங்கிரஸ் ஷாக் -
தொடக்கூடாத கையைத் தொட்டதா ஈரான்? ஜப்பான் செய்த அதே தவறு.. 30 விநாடியில் மாறப்போகும் உலக வரைபடம்! -
இஸ்ரேலை நோக்கி.. செஜில் வகை ஏவுகணைகளை வீச தொடங்கியது ஈரான்! ரொம்ப கஷ்டம்!












Click it and Unblock the Notifications