15,000 ஊழியர்களை தூக்கிய மைக்ரோசாப்ட்! AI கத்துக்க சொல்லி அட்வைஸ்! என்ன நடக்கிறது டெக் உலகில்?
வாஷிங்டன்: டெக் உலகில் வேலை வாய்ப்புகளை வெட்டி சுருக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மைக்ரோசாப்ட் 15,000 பேரை வேலையை விட்டு அனுப்பியுள்ளது. தற்போது பணியாற்றும் ஊழியர்கள் AI தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை விரைவாக கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம், வேலை ஆட்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 2025-ஆம் ஆண்டு வரை பல கட்டமாக 15,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலையை விட்டு நீக்க திட்டமிட்டுள்ளது. சமீபத்திய தகவல்படி, Xbox பிரிவு மற்றும் உலகளாவிய விற்பனை குழுக்கள் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளன. மே மாதத்தில் 6,000 பேரும், ஜூன் மாதத்தில் நூற்றுக்கணக்கான பேரும் வேலையை இழந்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு (AI) மைக்ரோசாப்ட்டின் எதிர்கால திட்டங்களில் முக்கிய பங்காக உள்ளது. AI-யை பயன்படுத்துவது விருப்பமாக இல்லாமல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டெவலப்பர் பிரிவின் தலைவர் ஜூலியா லியூசன், AI பயன்பாடு ஊழியர்களின் திறனை மதிப்பீடு செய்யும் முக்கிய அம்சமாக இருக்கும் என்று கூறியுள்ளார். "AI பயன்படுத்துவது இனிமேல் விருப்பம் அல்ல, இது அவசியம்," என அவர் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.
AI உள்கட்டமைப்பில் முதலீடு
இந்த ஆண்டில் மைக்ரோசாப்ட் AI உள்கட்டமைப்பில் சுமார் $80 பில்லியன் முதலீடு செய்துள்ளது. செலவுகளை குறைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. AI-யை அனைத்து துறைகளிலும் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போட்டியில் முன்னிலை வகிக்கவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் மைக்ரோசாப்ட் தனது திட்டங்களை மாற்றி அமைத்துள்ளது.
விற்பனை முறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பழைய விற்பனை பணிகளை குறைத்து, தொழில்நுட்ப அறிவு மற்றும் AI திறமைகள் கொண்ட "சொல்யூஷன்ஸ் இன்ஜினியர்ஸ்" நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமை வர்த்தக அதிகாரி ஜட்சன் அல்தாஃப், இது குறித்து கூறுகையில் "ஒவ்வொரு டிவைஸிலும் ஒரு கோ பைலட் இருக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார். அதாவது ஊழியர்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது 'கோபைலட்' (Microsoft Copilot) போன்ற AI கருவிகளை எந்த அளவுக்கு ஊழியர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்காணிக்க தொடங்கியுள்ளது.
மைக்ரோசாப்ட் தனது ஊழியர்களிடம் AI திறமைகளை மேம்படுத்துமாறு வலியுறுத்தி வருகிறது. AI கருவிகளை பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டுக்கான அறிக்கையில் AI பயன்பாட்டின் அளவீடுகள் சேர்க்கப்பட உள்ளன.
மொத்தத்தில், மைக்ரோசாப்ட் செயற்கை நுண்ணறிவில் கவனம் செலுத்தி வருகிறது. வேலை ஆட்களை குறைத்தாலும் மீதமுள்ள ஊழியர்களின் திறமைகளை வளர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விற்பனை முறைகளை மாற்றி செலவுகளை குறைத்து, AI-யை அனைத்து துறைகளிலும் கொண்டு சேர்க்க மைக்ரோசாப்ட் செயல்பட்டு வருகிறது.
-
IT JOBS: நாளை மதியம் சென்னையில் இண்டர்வியூ.. HCL-லில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு.. செம சான்ஸ் -
IT JOBS: மார்ச் 14ல் பெங்களூரில் இண்டர்வியூ.. பணி சென்னையில் தான்.. HCL தரும் சூப்பர் சான்ஸ் -
இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. 67 ஆயிரம் வரை சம்பளம்! 10, 12 ஆம் வகுப்பு தகுதி தான் -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து?












Click it and Unblock the Notifications