Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனிதர்களே தேவையில்லை! எவ்வளவு செக்யூரிட்டி இருந்தாலும்.. அசால்டாக நுழைந்து தாக்கும் AI போர் விமானம்!

Subscribe to Oneindia Tamil

சியாட்டில்: இப்போது ஏஐ இல்லாத துறையே இல்லை என நாம் சொல்லும் அளவுக்கு எல்லாத் துறைகளிலும் ஏஐ ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கிடையே முழுக்க முழுக்க ஆளே இல்லாமல் ஏஐ மூலம் செயல்படும் ஒரு அதிநவீனப் போர் விமானம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் போர் நடக்கும் முறைகளையே மாற்றும் என்று சொல்லப்படுகிறது.

இந்தக் காலத்தில் எல்லாத் துறைகளிலும் ஏஐ வளர்ந்து வரும் நிலையில், பாதுகாப்புப் படையும் அதற்கு விதிவிலக்கு இல்லை.. எதிர்காலத்தில் போர் முறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், ஷீல்ட் ஏஐ (Shield AI) நிறுவனம் எக்ஸ் பேட் (X-BAT) என்ற அதிநவீனப் போர் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் ஒரு அதிநவீனப் போர் விமானமாகும்.

What is the World First AI-Powered Jet X-BAT No Pilot No Runway Required Shield AI Revolution

ரன்வே தேவையில்லை

இந்த விமானம் புறப்படவும் தரையிறங்கவும் தனியாக ரன்வே தேவையில்லை.. நின்ற இடத்தில் இருந்தபடியே செங்குத்தாகப் புறப்படும் மற்றும் தரையிறங்கும் திறன் கொண்ட போர் ஜெட் ஆகும். பூமியின் எந்தவொரு பகுதியிலும் கடல்களுக்கு மேல் கூட சிறப்பாகச் செயல்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட அல்லது இல்லாத போதும் இது சிறப்பாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் இந்தப் போர் விமானம் அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்காவின் உயர் ராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு வல்லுநர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.. அடுத்த தலைமுறை போர் விமானமாகவே இது கருதப்படுகிறது.

வித்தியாசம் என்ன

மேலும், ஏற்கனவே நாம் பயன்படுத்தப்படும் வழக்கமான டிரோன்களுக்கும் இந்த விமானத்திற்கும் மிக பெரிய வேறுபாடு உள்ளது. தற்போதுள்ள டிரோன்கள் செயல்பட நாம் இன்புட் கொடுக்க வேண்டும். ஆனால், இது செயற்கை நுண்ணறிவு மூலம் தானாகவே செயல்படும். புறப்படுவது, ஒரு ஆபரேஷனை எப்படி வெற்றிகரமாகச் செயல்படுத்துவது என அனைத்தையும் இது தானாகவே முடிவு செய்யும்.

ஷீல்ட் ஏஐ சொல்வது என்ன

இது தொடர்பாக ஷீல்ட் ஏஐ இணை நிறுவனரும் முன்னாள் கடற்படை சீல் அதிகாரியுமான பிராண்டன் செங் கூறுகையில், "போரை முடிவுக்குக் கொண்டு வருவதே மிக பெரிய வெற்றி என்பதை நான் நம்புகிறேன். மோதலை அதிகரிப்பதை விட, அறிவார்ந்த அமைப்புகள் மூலம் மோதல்களைத் தடுப்பதே எங்கள் நிறுவனத்தின் நோக்கம். ஏஐ தொழில்நுட்பத்தை ராணுவத்தில் பல துறைகளில் பயன்படுத்த முடியும். இது நிச்சயம் புதியதொரு எதிர்காலத்தை உருவாக்கும்" என்றார்.

இந்தப் போர் விமானத்திற்கு ஓடுபாதைகள் தேவையில்லை. இது ஓடுபாதை இல்லாமல் நின்ற இடத்தில் இருந்து புறப்படும், தரையிறங்கும்.. இதன் மூலம், காடு, பனிக்கட்டிகள், முறையான தளம் இல்லாத இடம் என எந்தவொரு இடத்திலும் தரையிறங்கவும் மேலே எழும்பவும் முடியும்" என்றார்.

மூளையே இதுதான்

ஹைவ்மைண்ட் என்ற ஏஐ சாப்ட்வேர் தான் இந்தத் தானியங்கி போர் விமானத்தைத் தனித்துக் காட்டுகிறது. இதைப் போர் விமானத்தின் மூளை என்று கூட சொல்லலாம். தகவல் தொடர்பு இல்லாத இடங்களில் மனித இன்புட் இல்லாமல் எப்படிச் செயல்படலாம் என்ற முடிவுகளை ஹைவ்மைண்ட் எடுக்கிறது. அதாவது வழக்கமான டிரோன்களுக்கு இன்புட் மற்றும் ஜிபிஎஸ் சிக்னல்கள் நிச்சயம் தேவை. ஆனால், எஸ் பேட் இந்த இரண்டும் இல்லாத சூழல்களிலும் கூட சிறப்பாகச் செயல்படும். மனித மேற்பார்வை இல்லாமல் தனியாகச் செயல்படும்.

முக்கிய பாயிண்டுகள்

  • ஹைவ்மேண்ட் தொழில்நுட்பம் மூலம் விமானம் யாருடைய துணையும் இல்லாமல் இயங்கும்.. சிக்கலான மிஷன்களில் பைல் இருக்கும்போது அவர்களுக்கும் தேவையான டேட்டாவை கொடுத்து உதவும்.
  • தொடர்ச்சியான மனித கண்காணிப்பு இல்லாமல் கூட சுயமாகச் செயல்படும் திறமை கொண்டது.
  • ரியல் டைம் டேட்டாவை வைத்தும் மாறிவரும் போர்ச் சூழல்களுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு முடிவெடுக்கும்.
  • இதில் இருக்கும் ஏஐ கிட்டத்தட்ட மனித மூளை போலச் செயல்படும் என்பதால் ஜிபிஎஸ் இல்லாத சமயங்களிலும் கூட இது துல்லியமாக இயங்கும்.
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+