சந்திரனை ஆராயும் சந்திரயான் 3.. சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்கள் எப்படிப்பட்டவர்கள்?
சென்னை: சந்திரனை ஆராய சந்திரயான் 3 தயாராகி விட்டது. உலகமே இந்த நிகழ்வினை உற்று நோக்கும் நேரத்தில் சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசியில் பிறந்தவர்களின் குண நலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
சந்திரனின் வசீகரம்: சந்திரன் தேயும் மறையும். கடக ராசிக்கு அதிபதி சந்திரன். சந்திரன் குளிர்ச்சி பொருந்தியவன். வசீகரமானவன் என்பதால்தான் உடல் வசீகரம் மற்றும் முக வசீகரத்திற்கு காரகனாக சந்திரனை நிர்ணயித்துள்ளனர். சந்திரன் எப்பொழுதும் ஒரே மாதிரி தோற்றத்தில் இருப்பதில்லை 15 நாட்கள் தேய்ந்து 15 நாட்கள் வளர்கிறார். மனித மனமும் சந்திரனைப் போல சஞ்சலங்கள் நிறைந்ததுதான்.

கடக ராசியின் அதிபதி சந்திரன்: ராசிகளில் மிக முக்கியமான ராசி கடகம். காரணம் ராசியை தீர்மானிக்கும் சந்திரனின் வீடு இது. கடகம் ராசியின் அதிபதி சந்திரன். சந்திரன் வளர்ந்து தேய்வதுபோல், இவர்களும் தங்கள் குணாதிசயங்களில் அடிக்கடி மாறக்கூடியவர்கள். சந்திரன் வளர்ந்து தேய்வதுபோல் கடக ராசிக்காரர்களும் தங்கள் குணாதிசயங்களில் அடிக்கடி மாறக்கூடியவர்கள். உணர்ச்சிகளை சரியாக கையாள தெரிந்த கடக ராசிக்காரர்கள் வெற்றியாளர் தான். தன்னம்பிக்கை,அன்பு செலுத்தும் ஆற்றல்,அமைதி மற்றும் தன்னை தானே ஊக்க படுத்தி கொள்ளல் போன்ற குணங்கள் கடக ராசிக்காரர்களின் வாழ்வை வளமானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் மாற்றும். அப்பன் சிவன் தலையில் சூடி இருப்பதும்,திருமலைவாசன் திருவேங்கடமுடையான் கண்களாய் கொண்டிருப்பதும் சந்திரனை தான்.
குண நலன்கள் எப்படி: கடக ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள். சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். எல்லோரிடத்திலும் சகஜமாக பழகி எதையும் எளிதில் கிரகித்துக் கொள்வார்கள். எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் இவர்கள் துணிந்தபின் துயரம் இல்லை என்ற சொல்லிற்கேற்ப நண்டுபிடி போட்டு செய்து முடிப்பார்கள். இரக்க குணமும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படுவார்கள். ஜலராசி என்பதால் கற்பனை திறன் அதிகமிருக்கும். நல்ல ஞாபக சக்தியும் உண்டு.
சந்திரன் தன்மை: சூரியன் மட்டுமே சுய ஒளியில் பிரகாசிக்கும் கிரகமாகும். மற்ற கிரகங்கள் அனைத்தும் சூரிய ஒளியையே பிரதிபலிக்கின்றன. சூரிய ஒளியை பிரதிபலிக்கும் கிரகமான சந்திரன் மட்டும் ஒளியை மிகவும் அதிகமாக பிரதிபலிக்கிறது. சூரியனைப்போல் சந்திரனும் அனைத்து உயிர்களும் எளிதில் காணக்கூடிய ஒரு கிரகமாக உள்ளது. இதன் அடிப்படையில் சந்திரனை பிறர் தயவால் கிடைக்கும் புகழுக்கு காரகனாக நிர்ணயித்திருக்கிறார்கள். மேலும் இடது கண்ணுக்கு அதிபதியாகவும் நிர்ணயித்திருக்கிறார்கள்.
கடக ராசிக்காரர்கள் குணம்: கடக ராசியில் பிறந்தவர்கள் மிகவும் பலசாலிகள்,தைரியசாலிகள்,அறிவாளி,புத்திக்கூர்மையானவர். கலைகளில் ஆர்வம் அதிகம் இருக்கும். நீர் இருக்கும் பகுதியில் வாழ ஆசைப்படுபவர். நதிக்கரையோரம்,கடல் கரையோரமாக நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள். வாழ்க்கையில் அதிர்ஷ்டமும், துரதிஷ்டமும் கலந்து இருக்கும். குடும்ப பாசம் உடையவர். குழந்தைகளிடம் அதிகமாக அன்புடையவர். இரவில் பலம் உள்ளவர். சந்திரனைப்போல் சிறிது காலம் மங்கி மறைவதும், சிறிது காலம் பேரு புகழும் பெற்று வாழ்வது இவர்களுடைய இயற்கையாகும்.வெற்றியும் சுபிட்சமும் பெற்று இருப்பார். நன்றியுள்ளவர். உயர்பதவி வகிப்பவர்.
அரசாளும் தகுதி படைத்தவர்: கடக ராசியில் பிறந்தவர்கள் அதிக சிந்தனை படைத்தவர்,குடும்ப வாழ்வில் அக்கறை தீர்க்கமானப் பார்வையுடையவர்,திடீர் என உணர்ச்சி அடைவர்,மன்னிக்கும் குணம் உடையவர். தாய்மை உணர்வு உடையவர்,தாய்மைப் பாசத்திற்கு அடிமையானவர். கவிஞர்,கலைஞர் எழுத்தாளர்களாக புகழ் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்கள் அரசாளும் யோகம் பெற்றவர்கள், தலைமைப் பதவிக்குத் தகுதியானவர்கள் என்பதை நிருபித்துக்காட்டுவர். சுறுசுறுப்பு மிகுந்தவர்களாக இருப்பார். ஒருகாரியத்தை செய் என சொன்னவுடனேயே செய்துகாட்டுவர். முடி என்று சொன்னவுடனேயே முடித்துக்காட்டுபவர்.விடாமுயற்சியும் கொள்கையை விட்டுக்கொடுக்காத குணம்தான் இவர்கள் வெற்றிக்கு காரணமாக விளங்குகிறது.
நகைச்சுவை பேச்சாளர்: உயர்ந்த லட்சியங்களைக்கொண்ட இவர்கள் எல்லோரிடமும் சகஜமாகப்பழகுவர். தோளில் கைப்போட்டு தோழமையைக்காட்டும் இயல்பு இவர்களைப்போல யாருக்கும் இருக்காது. அவசரக்காரர்களைப்போல தோற்றமளித்தாலும்,காரியத்திலேயே கண்ணாயிருப்பர். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாத இவர்கள் நகைச்சுவையோடு பேசும் ஆற்றலால் உலகம் போற்றும் வாழ்க்கையை அமைத்துக்கொள்வர். முன்கோபம்மிக்கவர்களாக இருப்பதால் அதை பேச்சில் பிரதிபலிக்கும்பொழுதுக் குடும்ப உறுப்பினர்களில் ஒருசிலர் இவர்களைவிட்டு விலக நேரிடலாம். ஏற்ற இறக்கம் நிறைந்த வாழ்க்கை, இன்பமும் துன்பமும் இணைந்த வாழ்க்கையை வாழ்வார்கள். பணத்தினாலேயே விரோதம் ஏற்படும். ஆடம்பர செலவு செய்வார்கள்.
வெண்மை நிறம்: தாய்க்கு காரகனான சந்திரனே உணவுப்பொருளுக்கும், திரவப்பொருளுக்கும் காரகனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளான். கடல் நீர் நிலைகளை சந்திரன் தன் கட்டுப்பாடில் வைத்திருப்பதால் கடலில் கிடைக்கும் வெண் முத்து,வெண் பவழம், வெண் சங்கு போன்றவை சந்திரனுக்கு உரியதாக கூறப்படுகிறது. சந்திரனின் நிறம் வெண்மை என்பது குறிப்பிடத்தக்கது, நீரில் வளரும் வெள்ளை அல்லி சந்திரனுக்குரிய மலராக கூறப்படுகிறது. வயலில் நீரில் நின்று வளரும் நெல் அரிசி வெண்மை நிறமாக உள்ளதால், அது சந்திரனுக்கு உரிய தானியமாகக் கூறப்படுகிறது. தாய்மையின் அடையாளமான பால் சுரக்கும் மார்பகம் சந்திரனுக்கு உரிய உடல் உறுப்பாகும். பால் வெண்மை நிறத்தில் சுரக்கும் திரவம் என்பது குறிப்பிடத்தக்கது, இதன் அடிப்படையில் பால் தரும் பசு, பால் பொருட்கள் அனைத்தும் சந்திரனுக்குரியதாக கருதப்படுகிறது. சந்திரன் வளர்ந்து தேயும் தன்மையைப்போல் உள்ள விரைவில் அழுகிப்போகும் காய்கறிகள் ,பழங்கள் முதலானவை சந்திரனின் காரகப்பொருட்களாகும்.
கடக ராசிக்காரர்களின் வெற்றி: மதியின் முகத்தை போல் மனமும் மாறிய படியே இருக்கும். வெற்றி பெற தேவையான எந்த தகுதியும் என்னிடம் இல்லையோ என்கிற எண்ணம் அடிக்கடி வந்து போகும். பணமில்லை திறமையில்லை என்றெல்லாம் கூட நினைப்பதுண்டு. நமக்கு சொந்தமானவற்றை பிறர் கவர்ந்து விடுவாரோ என்ற அச்ச உணர்வும் இருந்தவாறே இருக்கும். இது போன்ற அதீத எண்ணங்களே உங்களை உள்நோக்கி சென்று பார்க்க வைத்து உங்களை நீங்களே கவனித்து கொள்ள வைக்கும். தற்காத்து தன்னம்பிக்கை பெறுவது அவசியம்.
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே பலரை வைத்து வேலை வாங்கும் சாமர்த்தியம் இருக்கும். எல்லா தகுதியும் தனக்கு உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உணர்ச்சிகளை சரியாக கையாள தெரிந்த கடக ராசி லக்னத்தில் பிறந்தவர்கள் வெற்றியாளர் தான். உங்கள் வாழ்வு எப்போதும் வளமானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் நீடித்திருக்கும்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications