Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குருப்பெயர்ச்சி 2025: மூலம் நட்சத்திரத்தினருக்கு அடிச்சது ஜாக்பாட்.. பண மழை கொட்டப் போகுது

Subscribe to Oneindia Tamil

குருப்பெயர்ச்சி: குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ள குருப்பெயர்ச்சியால் மூலம் நட்சத்திரக்காரர்கள் ராஜயோகம் பெறப் போகின்றனர். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காணப் போகிறார்கள். இந்த குருப்பெயர்ச்சியில் மூலம் நட்சத்திரத்தினர் என்னென்ன விதமான நற்பலன்களை அனுபவிப்பார்கள். எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி ஆரம்பமாகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. மிருகசீரிஷம் 2 ஆம் பாதத்தில் இருந்து புதன் வீடான மிதுனத்தின் வீட்டில் மிருகசீஷம் 3 ஆம் பாதத்துக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். அன்று முதல் அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வரை மிதுன ராசியில் இருக்கப் போகிறார். அதிசாரமாக அக்டோபர் மாதத்தில் மிதுனத்தில் இருந்து இறங்கி கடகத்துக்கு மீண்டும் வருகிறார்.

Guru peyarchi Guru peyarchi palangal Astrology

பிறகு, அங்கு வக்கிரமாகி டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மீண்டும் மிதுனத்தை நோக்கி தன்னுடைய பெயர்ச்சியை ஆரம்பிக்கிறார். மீண்டும் கடகத்துக்கு வருவார். இந்த குருப்பெயர்ச்சியினால் மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

தன்னுடைய முன்னேற்றத்தால் மற்றவர்களை வியக்க வைக்கக்கூடியவர்கள் மூலம் நட்சத்திரக்காரர்கள். மூலம் என்பது ஆஞ்சநேயருடைய நட்சத்திரம், கேதுவின் ஆளுமை பொருந்திய நட்சத்திரம். சுயம்பு போல தன்னைத் தானே செதுக்கி உருவானவர்களாக இருப்பார்கள். முதன்மையானவர்களா இருப்பார்கள். மூலம் நட்சத்திரக்காரர்கலுக்கு தலைக்கு மேல் குருவின் பார்வை உள்ளது.

3 ஆம் இடத்திற்கு குருவின் பார்வை அமைகிறது. அமோகமான காலகட்டமாக இருக்கும். லக்னத்திற்கோ, லக்னாதிபதிக்கோ குரு பார்வை கிடைக்கும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கும். குரு தன் வீட்டை தானே பார்ப்பதால் மூலம் நட்சத்திரக்காரர்களின் ஞானம் அதிகரிக்கும். வருமானம் பெருகப் போகிறது. பணம் விஷயங்களில் அபரிமிதமான வளங்களைக் கொடுக்கப் போகிறார்.

சுய கெளரவத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்படும். ஆண் குழந்தை பாக்கியம் உண்டாகும். குழந்தைகளுக்காக காத்திருப்பவர்களுக்கு கட்டாயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீக குருமார்களின் ஆசிகள் கிடைக்கும். மூலம் நட்சத்திரக்காரர்களின் தொழில் சிறப்பாக அமையும்.

பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்பு உண்டாகும். ஆன்மீக சுற்றுலாவுக்குச் செல்வீர்கள். குருப்பெயர்ச்சிக்குப் பின்னர் கோவில் சார்ந்த அமைப்புகள் உண்டாகும். முயற்சி ஸ்தானங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ராகுவுடைய பெயர்ச்சியும் ஜூன் மாதத்தில் வலுவாக இருக்கும். பிரம்மாண்டமான காலகட்டமாக இருக்கும். சிறு முயற்சி போட்டாலும் அதில் பெரிய வெற்றியைக் காண்பீர்கள். உங்களுடைய பெயர், புகழ், சந்தோஷம் கிடைக்கும்.

இளைய சகோதரியால் ஆதாயம் உண்டாகும். நண்பர்களால் மகிழ்ச்சி கிடைக்கும். இதுவரை நீங்கள் முயற்சி செய்கிற விஷயத்தில் நிச்சயமாக வெற்றி காண்பீர்கள். குரு பார்வை இருக்கும்போது செய்யும் முயற்சிகளில் நிச்சயம் முன்னேற்றம் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். அரசு, அரசு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். தந்தையாகும் வாய்ப்பு உண்டாகும். திருமண யோகம் உண்டாகும்.

குருவின் 7 ஆம் பார்வை விழுவதால் நல்ல அமைப்பாக இருக்கும். பிரிந்த சொந்தங்கள் கூடும். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு, மரியாதை உயரும். அதற்கான பாக்கியங்கள் உண்டாகும். 1, 3, 9 ஆம் இடம் இயங்குவதால் உங்களுக்கான மதிப்பை, அங்கீகாரத்தை உருவாக்கும். 3 ஆம் இடம் என்பது கும்பத்தின் வீடு, காலபுருஷனுடைய 16 வீடு. மூலம் நட்சத்திரக்காரர்கள் மீடியா மூலமாக நல்ல ஆதாயம் கிடைக்கும். வாக்கு வன்மை அதிகரிக்கும். தொட்ட முயற்சிகள் அனைத்திலும் பிரம்மாண்ட வெற்றி அடைவீர்கள்.

நிறைய பாக்கியங்கள் வந்து சேரும். இதுவரை செய்த புண்ணிய பலன்களுக்கான யோகங்களை குரு பகவான் கொடுக்கப் போகிறார். உங்கள் மூலமாக அடுத்தவர்களுக்கு அந்த பாக்கியங்கள் சென்று சேரும். தகவல் தொடர்புத் திறன் அமோகமாக இருக்கும். மொத்தத்தில் மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு இந்த ஒரு வருடம் அமோகமாக இருக்கும்.

பயணங்களால் அலுப்பு ஏற்படும். காலபுருஷனுக்கு 11 ஆம் வீடு மூக்கு, கழுத்து, தொண்டை, தோள், தோள்பட்டை விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சுவாசப் பிரச்சனை, சளி, காய்ச்சல் ஏற்படும். சுகாதாரம் இல்லாத இடத்தை தவிர்ப்பது நல்லது. குரு பார்வையில் ராகு இருப்பதால் எந்த தொந்தரவும் இருக்காது. இருப்பினும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

சிறு சிறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும். மற்றபடி மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு முன்னுக்கு வரும் காலகட்டமாக இருக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு, ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு செலுத்துவது நல்லது. வடமாலை சாற்றுவது அமோகமான பலன்களைத் தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+