ஆடி செவ்வாய் தேடிக்குளி... அரைத்த மஞ்சளை பூசிக்குளி - வீட்ல லட்சுமி கடாட்சம் வரும்
ஆடிச் செவ்வாயன்று எண்ணெய் தேய்த்து குளித்தால் மங்களம் தங்கும், வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.
சென்னை: ஆடி செவ்வாய் தேடிக்குளி... அரைத்த மஞ்சளை பூசிக்குளி' இது என்ன பழமொழின்னு யோசிக்கிறீங்களா? இப்போ யாருங்க எண்ணெய் தேய்ச்சு குளிக்கிறாங்க. தீபாவளிக்கு தீபாவளி எண்ணெய் தேய்த்து குளிப்பதோடு சரி என்று சொல்கிறீர்களா? இந்த செய்தி உங்களுக்குத்தான். உங்களுடைய வீட்டில் வறுமை நீங்கவும், லட்சுமி கடாட்சம் அதிகரிக்கவும் இன்று ஆடி செவ்வாய்கிழமை பெண்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளிங்க. மஞ்சளும் பூசி குளிங்க அதனாலதான் 'ஆடி செவ்வாய் தேடிக்குளி...அரைத்த மஞ்சளை பூசிக்குளி'ன்னு நம்ம பெரியவங்க பழமொழி சொல்லி வச்சிருக்காங்க.
பொதுவாகவே செவ்வாய்கிழமை மங்களகரமான நாள். அதுவும் ஆடி செவ்வாய் அற்புதமான நாள். ஆடிச்செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்கு விரதம் இருக்க வேண்டிய நாள். இந்த நாளில் விரதம் இருந்தால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமண தடைகள் நீங்கும்.

செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் துர்கை மற்றும் முருகபெருமானை வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமணப் பாக்கியமும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
ஆடி செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் வைத்து, மஞ்சள் பூசிக் தோய்ந்து விரதம் அனுஷ்டித்து அம்மனையும் முருகனையும் வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலம் கூடும், தோஷங்கள் நிவர்த்தியாகும், மாங்கல்யத் தடை நீங்கும், பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்
ஆடி செவ்வாயில் ஔவையார் நோன்பு இருந்தால் கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் நம்புகிறார்கள். தமிழகத்தின் தென் பகுதிகளில் ஆடிச்செவ்வாய் அன்று நோன்பு கடைப்பிடிக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஔவையார் அம்மன் கோவிலில் திருமண தடை தோஷம் நீங்கவும் குழந்தை பேறு கிடைக்கவும் விதவிதமான கொழுக்கட்டைகளை படைத்து வழிபடுவது வழக்கம். இன்று ஆடி செவ்வாய் எண்ணெய் தேய்த்து குளித்து அம்மனை வணங்குங்க... வீட்ல நிறைய நல்ல விசயங்கள் நடக்கும் வருமானம் பெருகும். லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications