தீபாவளி அன்று எல்லாமே மாறும்.. வாழ்க்கை ராக்கெட் வேகத்தில் பறக்க போகுது.. ரிஷப ராசிக்கான பலன்
சென்னை: 2024 தீபாவளி அன்று ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்.. அவர்கள் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம். தீபாவளி முன்னும், தீபாவளி அன்றும் , அதன்பின்பும் என்ன நடக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
வீட்டில் உள்ளவர்களுக்கு கடன் தொல்லை, சொத்துக்களை இழந்தது, நிலத்தை இழந்தது என்று எல்லாம் உங்கள் வாழ்க்கையில் நடந்துவிட்டது. ரிஷப ராசிக்காரர்கள் கடந்த 5 வருடமாக கஷ்டப்பட்டு வந்து இருப்பீர்கள். வேலை இல்லை, வருமானம் இல்லை என்ற நிலை பலருக்கும் இருந்திருக்கும். இனி அதெல்லாம் மாறும்.

தனிப்பட்ட வளர்ச்சி உங்கள் வாழ்வில் இருக்கும். முக்கியமான பிஸ்னஸ் செய்பவர்களுக்கு இது பொற்காலம். புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது நல்லது. புதிய திறன்கள் அல்லது பொழுதுபோக்குகளைக் கற்றுக்கொள்வதற்கான எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும்.
வேலை இருந்தால் நல்ல சம்பளம் இல்லை, சம்பளம் இருந்தாலும் 10 நாளைக்குதான் நிற்கிறது மீதம் மாதத்தில் 20 நாட்கள் கையில் பணம் இல்லை என்ற நிலைதான் இருந்தது. அது இனி இருக்காது.
நீங்கள் பேசும்போது கவனமாக பேச வேண்டும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம் உங்களுக்கே எதிராக செல்லலாம்.
கோபம் அதிகரிக்கும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள்.
அதிக எதிர்பார்ப்புகள் வேண்டாம்: எதிலும் அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். அப்படி நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும். பொறுப்புகளை புறக்கணித்தல் வேண்டாம். எந்த பணியை செய்தாலும் கவனமாக இருங்கள். போக்குவரத்து, பயணங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும். குழந்தைகள் படிப்பு விஷயத்தில் கூடுதல் அக்கறையோடு இருக்கவும். முக்கியமாக இளைஞர்கள் காதல் வயப்படுவதில் கொஞ்சம் கவனமாக யோசித்து செயல்படவும்.
முழுக்க முழுக்க கெட்ட விஷயங்கள் மட்டும் நடக்கும் என்று நினைக்க வேண்டாம். ஆரோக்கியத்திலும், குடும்பத்திலும் சிரமங்களை ஏற்படுத்தினாலும் தலைக்கு வந்தது எல்லாம் தலை பாகையோடு சென்றுவிடும். இது வேலை ரீதியாக நீங்கள் சிம்மாசனத்தில் அமரும் காலம். உங்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். எதுவும் நல்லதே நடக்காதா.. தடங்கல்கள் மட்டுமே வருமா என்று கேட்க வேண்டாம். சில நல்ல விஷயங்களும் நடக்க போகின்றது.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: போக்குவரத்தில் கவனமாக இருங்கள். நிலம் வாங்குவது, கடன் வாங்குவதில் கவனம் வேண்டும்., குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். ஆனால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சமயங்களில் கிட்னி பிரச்சனைகள் ஏற்படலாம். அதேபோல் வயிற்று பிரச்சனைகள் கூட அதிகம் ஏற்படலாம். சுப செலவு இருக்கிறது என்பதால் பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம். முதலீடுகளில் அகலக்கால் வைக்க வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எந்த விதமான முதலீடுகளையும் செய்வது நல்லது. பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள் இல்லையென்றால் சுப செலவாக மாற்றுங்கள். ஆலங்குடி குருஸ்தலத்திற்கு சென்று பூஜை செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். .












Click it and Unblock the Notifications