மார்கழி மாதத்தில் திருப்பாவை கேட்டு கண் விழிக்கும் திருப்பதி ஏழுமலையான்
மார்கழி மாதத்தை முன்னிட்டு திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் உள்ளிட்ட வைணவ தளங்களில் சுப்ரபாதத்திற்கு பதிலாக அதிகாலைப் பாடலாகவும் மூலவரை நித்திரையில் இருந்து எழுப்பிடவும் திருப்பாவை, திருவெம்பாவை ப
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் பிரபல இசையரசி எம்.எஸ்.சுப்பலட்சுமியின் பாடப்பட்ட சுப்ரபாதம் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. தைமாதம் தொடங்கி கார்த்திகை மாதம் வரை 11 மாதங்கள் சுப்ரபாதம் ஒலிபரப்பிய பின்னர் மார்கழி மாதத்தில் 30 நாட்களும் திருப்பாவை திருவெம்பாவை பாடல்கள் ஒலிபரப்படுகிறது.
இந்த நிலையில் செவ்வாய்கிழமை மார்கழி முதல் நாள் தொடங்கி அடுத்த முப்பது நாட்களும் ஏழுமலையான் கோயில் உள்ளிட்ட ஸ்ரீரங்கநாதர் கோயில் ஸ்ரீராமர் கோயில்களில் திருப்பாவை அதிகாலைப் பாடலாக ஒலிபரப்பப்படுகிறது.

12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் எழுதிய திருப்பாவை ஜீயர்கள் முன்னிலையில் அதிகாலை 3 மணிக்கு பாடப்பட்டு ஏழுமலையானை எழுப்புவார்கள். இந்த திருப்பாவையை கேட்டுத்தான் ஏழுமலையான் இனி கண்விழிப்பார்.

திருப்பாவை சேவை ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படுகிறது. மார்கழி மாதம் நிறைவு பெறும் வரை அதாவது ஜனவரி 14ஆம் தேதிவரை திருப்பாவை சேவை நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து தை மாதம் பிறந்ததும் ஜனவரி 15ஆம் தேதி முதல் மீண்டும் சுப்ரபாத சேவை நடக்கும்.

தினந்தோறும் ஏகாந்த சேவையின் போது சீனிவாச மூர்த்திக்கு பூஜைகள் செய்யக்கூடிய நிலையில் மார்கழி மாதத்தில் கிருஷ்ணருக்கும் ஏகாந்த சேவை பூஜைகள் செய்யப்பட உள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications