தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் - சுக்கிரன்
நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இன்று தரிசிக்கவிருப்பது தென்திருப்பேரையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மகர நெடுங்குழைக்காதர் திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் ஏழாவது திருப்பதியாகவும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்துமூன்றாவது திவ்ய தேசமாகவும் விளங்குகிறது.

புராணச் சிறப்பு:
திருமாலின் தேவியரில் ஸ்ரீதேவி சிவந்த நிறம் கொண்டவர். பூதேவி கருமை நிறம் கொண்டவர். சிவந்த நிறம் கொண்ட தம்மைவிட பூதேவியிடம் அதிக அன்பு கொண்டவராக திருமால் இருப்பதைக் கண்ட திருமகள் துர்வாச முனிவரிடம் சென்று பூதேவியின் கரிய நிற மேனியை சிவந்த பொன்மேனியாக மாற்றுமாறு வேண்டிக்கொண்டார்.
துர்வாச முனிவர் திருமாலைக் காண செல்கிறார். திருமாலின் திருமடியில் சயனித்து இருந்த பூதேவி துர்வாசரின் வருகையை கவனிக்கவில்லை இதனால் கோபமுற்ற துர்வாசர் பூதேவி கரிய நிறம் நீங்கி சிவந்த நிறம் அடையுமாறு சபித்தார். பூதேவியும் குற்றத்தை பொருத்தருள வேண்டி சாபவிமோசனம் வேண்டினார்.
தாமிரபரணி நதிக்கரையில் உள்ள அரிபதம் என்ற இடத்திற்க்கு சென்று திருப்பேரை எனும் பெயர் தாங்கி திருமாலை வழிபட்டு வந்தால் மீண்டும் கரிய நிறம் அடையலாம் என்று துர்வாச முனிவர் கூறினார். பூதேவியும் தங்கத் திருப்பேரை எனும் நாமத்துடன் இவ்வூரில் தோன்றி தாமிரபரணி நதிக்கரையில் தவமியற்றி வந்தார்.
பங்குனி உத்திரத் திருநாளன்று நதியில் நீராடிய பூதேவியின் கரங்களில் மீன் வடிவக் குண்டலங்கள் கிடைத்தது. அவற்றை கொண்டு சென்று பெருமாளின் காதுகளில் அணிவித்தார். திருமால் மகிழ்ந்து பூதேவியின் கரிய நிறத்தை மீண்டும் அளித்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.
எம்பெருமான் காதுகளில் நெடிய குண்டலம் அணிந்திருப்பதால் நெடுங்குழைக்காதர் என அழைக்கப்பட்டார். இத்திருத்தலம் தென் திருப்பேரை என அழைக்கப்பட்டு வருகிறது.
இலக்கியச் சிறப்பு:
நம்மாழ்வார் இத்திருப்பதி மீது பதினோரு பாசுரங்கள் பாடியுள்ளார்.
தனிச் சிறப்பு:
இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் ஏழாவது திருப்பதியாகவும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்துமூன்றாவது திவ்ய தேசமாகவும் விளங்குகிறது.
கருடன் சன்னதி பெருமாளுக்கு நேர் எதிரில் அமையாமல் சற்று விலகி அமைந்துள்ளது. வேதம் ஓதும் சப்தங்களையும், விழாக்கள் நடைபெறும் ஓசைகளையும், சிறு பிள்ளைகள் விளையாடும் ஒலிகளையும் பெருமாள் தினமும் கேட்க விரும்பியதால் கருடன் சற்று விலகி அமைந்துள்ளதாக தலபுராணம் கூறுகிறது.
அமைவிடம்:
திருநெல்வேலி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூரிலிருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளது.
இறைவன் : மகர நெடுங்குழைநாதர், நிகரில் முகில்வண்ணன்
இறைவியர்: திருப்பேரை நாச்சியார், குழைக்காது நாச்சியார்
தீர்த்தம் : கூடுபுனல் தீர்த்தம்(ஸகந்த தீர்த்ட்தம்) சுக்ர புஷ்கரணி
தல விருட்சம் : வில்வ மரம்
ஆகமம் : பாஞ்சராத்திர ஆகமம்
விமானம் : பத்ர விமானம்
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications