வாட்டிய சனி இனி அதிர்ஷ்டங்களை கொட்டுவான்.. பூலோக அதிபதி ஆகும் காலம்.. மேஷ ராசி சனிப்பெயர்ச்சி பலன்!
சென்னை: வாழ்நாள் முழுக்க மேஷ ராசிகளை வாட்டிய சனி இனிமேல் அதிர்ஷ்டங்களை கொட்ட போகிறான். ஜூன் 30ம் தேதி நடக்க உள்ள சனி வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு எதிர்பார்க்காத பலன்களை கொடுக்க போகிறது.
சனி பகவான் அடிக்கடி இடம் மாற கூடியவர் அல்ல. ஒவ்வொரு ராசியிலும் நீண்ட காலம் அதாவது இரண்டரை ஆண்டு காலம் இருக்கும் குணம் கொண்டவர் சனி பகவான்,. ஒரு ராசியில் இருக்கிறார் என்றால் அந்த ராசிக்கு மட்டும் மெல்ல 12 ராசிகளுக்கும் நல்ல பலன்களையும் கெடு பலன்களையும் கொடுக்க கூடியவர்.

அதோடு அவ்வப்போது முன்பும், பின்னும் நகர்ந்து பலன்களை மாற்றுவார். சில சமயங்களில் ராசி ரீதியாக மாறாமல் நட்சத்திர ரீதியாக முன்னும் பின்னும் நகருவார். இப்படி சனி பின்னோக்கி நகர்வதை வக்ர பெயர்ச்சி என்று கூறுவார்கள். தற்போது கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி இருக்கிறார்.
அதுதான் அந்த ராசியின் கடைசி நட்சத்திரம். இப்படிப்பட்ட நிலையில் அவர் பின்னோக்கி சதய நட்சத்திற்கு செல்கிறார். அதனால் இது வக்கிர பெயர்ச்சி. ஜூன் 30-ம் தேதி முதல் வக்ர பெயர்ச்சி அடைகிறார் சனி பகவான். அதன்பின் அக்டோபர் 5ம் தேதி மேலும் பின்நோக்கி சென்று அவிட்டம் நட்சத்திரத்தை அடைகிறார்.
மேஷ ராசிக்கான பலன்; இதில் வாழ்நாள் முழுக்க மேஷ ராசிகளை வாட்டிய சனி இனிமேல் அதிர்ஷ்டங்களை கொட்ட போகிறான். ஜூன் 30ம் தேதி நடக்க உள்ள சனி வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு எதிர்பார்க்காத பலன்களை கொடுக்க போகிறது. அவை என்னென்ன பலன்கள் என்று பார்க்கலாம்.
இத்தனை காலம் எப்படி இருந்தது?: மேஷ ராசிக்கு இத்தனை காலம் கஷ்டமாக இருந்தது. பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு இருப்பீர்கள். தேடி வந்த வாய்ப்புகளை நழுவிட்டு இருப்பீர்கள். இருந்த சொத்துக்களை இழந்து இருப்பீர்கள். கடன்காரர்கள் ஆகி இருப்பீர்கள். கடன் மேல் கடன் வாங்கி குவித்து இருப்பீர்கள்.
சொந்த வீட்டை விற்று இருப்பீர்கள். சொந்த நிலத்தை விற்று இருப்பீர்கள். வாடகை வீட்டில் கடந்த 10 - 15 ஆண்டுகளாக இருந்திருப்பீர்கள். மிக கடுமையாக பொருளாதார ரீதியாக படாதபாடெல்லாம் பட்டிருப்பீர்கள்.
உங்கள் மகளின் திருமணம், மகனின் திருமணம் பிரச்சனையில் முடிந்து இருக்கும். கடுமையாக மன கஷ்டங்கள் ஏற்பட்டு இருக்கும். உங்களின் மண வாழ்க்கையே கூட சமயங்களில் பிரச்சனை ஆகி இருக்கும். அது எல்லாம் தற்போது முடிவிற்கு வரப்போகிறது.
பிரச்சனை ஓவர்: இனி ஜூன் 30 முதல் உங்களுக்கு பணம் தேடி வரும். சொந்தமாக வீடு கட்டும் வாய்ப்பு வரும். புதிய வேலை கிடைக்கும். நிலம் வாங்கும் வாய்ப்புகள் வரும். கடன்களை அடைப்பீர்கள் . இத்தனை காலம் நிலவிய கடன்களுக்கு முடிவு வரும்.
முக்கியமாக பண ரீதியாக நிலவி வந்த பிரச்சனைகள் சரியாகும். ஆனால் அதே சமயம் ஆரோக்கிய ரீதியாக குறைபாடுகள் ஏற்படலாம்.
வயிற்று பிரச்சனை ஏற்படலாம். கால் வலி, இதய ரீதியான பிரச்சனைகள் ஏற்படலாம். வேலை மாற்றங்கள் இடமாற்றங்களுக்கு வாய்ப்பு உண்டு.
அக்டோபருக்கு பின் திருமண விவகாரங்களுக்கு முயற்சி எடுக்கலாம். அதற்கு முன் திருமணத்திற்கு முயன்றால் பலன் அளிக்காது. பட்டீஸ்வரம் கோவிலுக்கு சென்று வணங்குவது பலன் அளிக்கும்.












Click it and Unblock the Notifications