சீரடி சாய்பாபா கோவிலுக்கு வரும் பக்தர்களே... ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் அணிந்து வரவேண்டாம் - நிர்வாகம்
பக்தர்கள் நாகரிகமாக கோவிலுக்கு உடையணிந்து வருமாறு சீரடி சாய்பாபா கோவில் அறக்கட்டளை நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது. இதுதொடர்பாக கோவிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
சீரடி: ஆலயம் என்பது புனிதமான இடமாகும் அங்கே இறைவனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நாகரீகமாக கலாச்சார உடை அணிந்து வர வேண்டும் என்று சீரடி சாய்பாபா கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர், சீரடியில் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவில் உள்ளது. இங்கு மகாராஷ்டிராவில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலம் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மார்ச் மாதம் மூடப்பட்ட கோவில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆன்லைனில் புக் செய்து வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்தநிலையில் பக்தர்கள் நாகரிகமாக கோவிலுக்கு உடையணிந்து வருமாறு சீரடி சாய்பாபா கோவில் அறக்கட்டளை நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது. ஷாட்ஸ், பெர்முடாஸ், டைட் பேண்ட், டி சர்ட், லெக்கின்ஸ் போன்றவைகளை அணிந்து வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் நாகரிகமாக அல்லது பாரம்பரிய உடையை அணிந்து கோவிலுக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலர் கோவிலுக்கு அநாகரிகமான உடையணிந்து வருவதாக பக்தர்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்தன. இது புனித மற்றும் தெய்வீக இடமாகும். எனவே நாகரிகமாகவோ அல்லது இந்திய கலாசார உடைகளை அணிந்து வருமாறு பக்தர்களுக்கு கோரிக்கை விடுத்து உள்ளோம் என்று கோவில் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி கான்குராஜ் பாகதே தெரிவித்துள்ளார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications