தமிழ் புத்தாண்டு ராசி பலன்.. துலாம் ராசிக்கு நடக்க போவது இதுதான்.. ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
சென்னை: ஏப்ரல் 14ம் தேதி நாளை பிறக்க உள்ள தமிழ் புத்தாண்டிற்கு பின் துலாம் ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் வரும் என்று பார்க்கலாம். இந்த தமிழ் புத்தாண்டிற்கு பின் உங்கள் வாழ்க்கையில் சில கசப்பான, பல இனிப்பான மாற்றங்கள் நடக்க போகின்றன
பொதுவாக குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி தாண்டி சுபதினங்களை வைத்தும் உங்களின் ராசி பலன்கள் மாறும். முக்கியமாக புதிய வருடங்கள் பிறக்கும் போது கிரக நிலைகளை பொறுத்து உங்களின் வாழ்க்கை மாறும். புது வருடங்களில் கிரக நிலைகள் எப்படி இருக்கின்றன என்பதை பொறுத்து உங்கள் வாழ்க்கையே தலைகீழாக மாறலாம்.

புதிய வருடங்களில் கிரகங்கள் எங்கே எல்லாம் செல்கின்றன என்பதை பொறுத்து உங்களின் வாழ்க்கை மாற்றம் அடையும். இதனால் துலாம் ராசிக்கு என்ன மாதிரியான மாற்றங்கள் எல்லாம் நடக்கும் என்று பார்க்கலாம்.
துலாம் ராசிக்கு வரப்போகும் பலன்கள்:
இந்த புத்தாண்டில் உங்களுக்கு நல்லதை விட கெட்டதையே கொஞ்சம் அதிகம் கொடுக்கும். கால சக்கரத்தில் இரண்டாவதாக இருக்கும் சுக்கிரனின் வீடான ரிஷப ராசிக்கு செல்கிறார் குரு.
இதற்கு முன் உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் இருந்தார் குரு. இப்போது 8ம் இடத்தில இருக்கிறார். துலாம் ராசிதாரர்களுக்கு பொதுவாகவே குரு பிரச்சனைகளை தரும்.
குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். போக்குவரத்தில் கவனமாக இருங்கள். விபத்து ஏற்படும் வாய்ப்புகள் கூட உள்ளதால் கவனமாக இருக்கவும்.
துலாம் ராசி கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
பங்காளிகள் உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். பண தேவை அதிகம் இருக்கும். கையில் காசு நிற்காது. பணம் செலவாகிக்கொண்டு இருக்கும்.
அதாவது வெளிநாடு போகும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் நிலவி வந்த மனஸ்தாபங்கள், பிரச்சனைகள் குறையும்.
கணவன் மனைவி அந்யோனியம் அதிகரிக்கும். திருமணம் கைகூடும். வேலை நிமித்தமாக இடம் மாற்றம் வாய்ப்பு உண்டு. வேலை மாற்றமும் வாய்ப்பு உண்டு. போக்குவரத்து, பயணங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும். குழந்தைகள் படிப்பு விஷயத்தில் கூடுதல் அக்கறையோடு இருக்கவும். முக்கியமாக இளைஞர்கள் காதல் வயப்படுவதில் கொஞ்சம் கவனமாக யோசித்து செயல்படவும்.
யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் வாக்கு உங்களுக்கே எதிராக திரும்பலாம். நிலம் வாங்குவது, வீடு வாங்குவதில் கவனம் செலுத்தவும். தவறாக முடியலாம். வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம்.
போக்குவரத்தில் கவனமாக இருங்கள்.நிலம் வாங்குவது, கடன் வாங்குவதில் கவனம் வேண்டும்., குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம்.
வேலை நிமித்தமாக இடம் மாற்றம் வாய்ப்பு உண்டு. வேலை மாற்றமும் வாய்ப்பு உண்டு. வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டு.
பரிகாரம்: அருகே உள்ளே கோவில்களில் உள்ள நவ கிரக ஸ்தலங்களை வழிபடுவது தனி தனியாக நவ கிரக கோவிலகிலுக்கு செல்வது நல்ல பரிகாரமாக அமையும். ஆலங்குடி குருஸ்தலத்திற்கு குரு பெயர்ச்சிக்கு பின் சென்று பூஜை செய்வது பலன் தரும். .












Click it and Unblock the Notifications