Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் ராகு, புதன்.. பிப்ரவரியில் வரும் யோகம்

Subscribe to Oneindia Tamil

பிப்ரவரி மாத பலன்: புத்தாண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். இந்த பிப்ரவரி மாதத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். சந்திரன் தன்னுடைய கடக ராசியில் ஆட்சி வீட்டில் அமர்கிறார். சொந்த வீட்டில் ஆரம்பித்து சொந்த வீட்டிலேயே இந்த மாதத்தை நிறைவு செய்வார்.

rishabam-rasi-palan-what-kind-of-benefits-will-get-rishabam-rasi-people-during-this-february-month

கேது பகவான் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் மகர ராசியில் அமர்ந்திருக்கின்றனர். மகரத்தில் செவ்வாய் உச்சமடைந்துள்ளது. கும்ப ராசியில் புதன் பகவானும், செவ்வாயும் அமர்ந்திருக்கின்றனர். மீனத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். அந்த வகையில், இந்த பிப்ரவரி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிர பகவான், மகாலட்சுமியை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். ரிஷப ராசி என்பது சுக்கிரனுடைய வீடு. வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் ஐந்து முக நெய் தீபம் போடுவது நல்லது. மகாலட்சு அஷ்டோத்திரைக் கேட்பது படிப்பது உங்களுக்கு அற்புதமான முன்னேற்றத்தைத் தரும். மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடிய வகையில் உங்களுடைய செல்வம் உயரும்.

சொத்துகள் விற்கும் யோகம்

பிப்ரவரி மாதத்தில் ராசிநாதனாகிய சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்கிறது. இது மிகப்பெரிய பாக்கியத்தையும், யோகத்தையும் கொடுக்கும். உங்களுடைய பொருளாதார நிலை உயரும். செவ்வாய் உச்சமாக இருப்பதால் பழைய சொத்துகளை விற்பதற்கான முயற்சி, பூர்வீக சொத்துகளை விற்கும் முயற்சியில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.

வேலை வாய்ப்பு

செவ்வாய் 9 ஆம் இடத்தில் உச்சமாக இருக்கும்போது சகோதரர்களுக்கு சில கருத்து மாறுபாடுகள் இருக்கும். சொத்தைப் பிரிப்பதிலோ, விற்பதிலோ சில தடைகள் வந்து நிவர்த்தியாகும். 4 ஆம் இடத்துக்குரிய சூரியன் 9, 10 ஆம் இடத்தில் பயணம் செய்வதால் ஒப்பந்த ரீதியிலான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு வேலை நிரந்தரமாகும். தன ஸ்தானதிபதியாகிய புதன் பகவான் 10 ஆம் இடத்தில் ராகுவுடன் அமர்ந்திருக்கிறார்.

பண வரவு கொட்டும்

புதன் பகவான், ராகு சேர்க்கை ஆட்களுக்குத் தகுந்தாற்போல பேச வைக்கும். நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தைக் கொடுக்கும். 2 இல் இருக்கும் குரு பகவான் நல்ல பண வரவைக் கொடுப்பார். 5 ஆம் இடத்திற்குரிய குரு 10 ஆம் இடத்தில் அமரும்போது பலருக்கு வேலையில் நெருக்கடி, புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

வழிபாடு

படிக்கக்கூடிய பிள்ளைகளைப் பொறுத்தவரை நல்ல மதிப்பெண்கள் பெறும் யோகம் உண்டாகும். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கவனம் சிதறக்கூடிய சூழல் ஏற்படும். தொழிலை பெரியளவுக்கு விரிவுபடுத்தக்கூடிய யோகம் உண்டு. நல்ல பணியாளர்கள் கிடைப்பார்கள். திருச்செந்தூர் முருகப் பெருமான் வழிபாடு செய்வதும், தினந்தோறும் சஷ்டி கவசத்தைப் படிப்பதும் மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+