Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு 100 சதவீத யோகம்.. இந்த வாரத்தில் நடக்கும் அதிசயம்
வார ராசி பலன்: அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 20 முதல் 26 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நவராத்திரி ஆரம்பித்து நிறைவடைந்துள்ளது. அக்டோபர் 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதீத யோக பலத்தைப் பெறும் நல்ல காலகட்டமாக இருக்கும். மன அழுத்தங்கள் தீரும். கணவராக இருந்தால் மனைவியின் உடல்நிலை, மனைவியாக இருந்தால் கணவனின் உடல்நிலையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் கெளரவங்கள் ஏற்படும்.
ஆசிர்வாதம்
கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். எடுத்த காரியங்களில் நன்மைகள் ஏற்படும். முதலீடுகளுக்கு குறைவிருக்காது. வசந்தங்கள் ஏற்படும் அமைப்பு உண்டாகும். ஆரோக்கியத்தில் வயிறு, ரத்த அழுத்தம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. ஆசிர்வாதம் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
யோகம் உண்டாகும்
யோக பலன்களை அதிகளவில் பெறும் காலகட்டமாக இருக்கும். வசந்தங்கள் ஏற்படும் அமைப்பு உண்டாகும். முதலீடுகளுக்கு குறைவிருக்காது. குரு அதிசாரத்தில் இருப்பதால் அடுத்தடுத்து சுப காரியங்கள் நடக்கும் யோகம் உண்டு. பெரிய அளவுக்கு அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். பதவி உயர்வில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.
பணம் கொட்டும்
பண வரவு ஏற்படும். பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்வீர்கள். பண வரவு உண்டாகும். பதட்டமில்லாமல் நிதானத்துடன் எல்லாவற்றையும் எடுத்து செய்வீர்கள். இழுபறியாக இருந்த விஷயங்கள் இனி அடுத்தடுத்து நடக்கும் யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக இருந்து வந்த பலவிதமான பிரச்சனைகள் தீர்வது நம்பிக்கையை ஏற்படுத்தும். வெள்ளிக்கிழமை தோறும் தெய்வ வழிபாடு செய்வது முக்கியம்.












Click it and Unblock the Notifications